May 22, 2010

ஒரே ஒரு கவிதை

ஒரே ஒரு கவிதை
எழுதியதும்

எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதையை
எழுதியதும்

நிறுத்திக் கொண்டு விடலாம்

கவிதை எழுதுவதையும்..
நினைப்புகளையும்..

16 comments:

க.பாலாசி said...

//எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதையை
எழுதியதும்//

அப்படியேதும் இருக்காயென்ன?

vasan said...

க‌விதைக்கு ஏன் க‌ட்டுப்பாடு?
எல்லோரும் பிர‌மித்த‌ பின்தானே
க‌விதைக்கு பிரியாவிடை?
பிர‌மிக்க‌ ம‌றுத்து நான் எப்போதும்
ப‌திவுக‌ளைத் பார்த்துக் கொண்டே..

கே. பி. ஜனா... said...

ஓ அதனால தான், 'பிரமிக்க வைத்தது!' என்று புகழ்ந்தார்களா நான் எழுதிய கவிதையை?

Paleo God said...

உண்மைதான்! :)

ஹேமா said...

அந்த
"ஒரே ஒரு பிரமிக்கும் கவிதை" வாழ்நாளில் எப்போ வரும் என்பதுதான் !
வந்தபின் நினைவுகள் அறுபடும்.அதன் பின்தான் !

நேசமித்ரன் said...

அதற்கான தேடல்தான்

கவிதை!!!!!!!!!!!!!!!!!!!!

nilalgal said...

nalla kavithai

movithan said...

ஆகா,இப்படியும் எழுதலாமா?

வசந்தமுல்லை said...

இன்றுதான் காலையில்தான் உங்கள் கவிதைகள் எப்படியெல்லாம் நன்றாக இருக்கின்றன என யோசித்து கொண்டிருந்தேன். உங்கள் கவிதை அதற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. எனிவே கிரேட்!
பிரியாவிடை பற்றி யோசிக்கவேணாம் !

சுந்தர்ஜி said...

அதைத் தேடித்தானே மொழி செல்கிறது.ஆனால் தேடுதல் முடியாது.கவிதைகளும்.

VELU.G said...

நல்ல சிந்தனை ரிஷபன். ஆனால் ஜெயகாந்தனைப்போல நமக்கு அந்த தைரியம் உன்டா?

ஹுஸைனம்மா said...

//எல்லோரும் பிரமிக்கும்
அந்த ஒரே ஒரு கவிதை//

மழலை??

பத்மா said...

நிறுத்த முடியுமா? மற்றொரு நினைவு தொடங்கும் ....நினைவும் கவிதையும் நின்றால் யாவுமே நின்று போகும்

Madumitha said...

அதற்கான முயற்சி தானே
எல்லாக் கவிதைகளும்.

விஜய் said...

ஆமாம்

ஒத்துக்கொள்கிறேன் உங்கள் சிந்தனையை

வாழ்த்துக்கள்

செந்தில்குமார் said...

தேடல் முடிவில்லா பயணம்
தேடுங்கள் இன்னும்
கவிதைகளாய்.........ரிஷபன்

செந்தில்குமார்.அ.வெ