எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !
ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும்
ஒளிக்காமல் இருப்பதில்லை
இந்த மனசு !
ப்ரியம் பூத்திருக்கும்
பூவைப் பார்க்காவிட்டாலும்
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது
வாழ்நாள் முழுமையும் !