எனக்கான அடையாளம் தொலைத்து
எங்கும் பரவி நிற்கும் அன்பாய்
காற்றின் கை கோர்த்து நடக்கிறேன்..
எனக்கு முன்னும் பின்னுமாய் எத்தனை காலடித்தடங்கள்..
எவர் முகமும் எனக்குத் தெரியவில்லை.
சகலமும் என் முகமாய்..
காற்றின் அறிமுகமாய்..
ஒவ்வொரு சூறாவளிக்குப் பின்னும்
உயிர்த்தெழும் மானுடம்
காற்று அளித்த வரம்.