
நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
January 31, 2010
கூச்சமில்லாமல் ஒரு பேனா

January 30, 2010
ஒவ்வொரு மழை நாளிலும்

தவறாமல் உன் நினைப்பு.
ஒவ்வொரு சொட்டாய் உதிர்க்கும்
என் வீட்டு முற்றம்
மழை விட்ட பின்னும்.
ஜன்னல்களை மூடிவைக்கிற
நகர வாழ்வில்
வீட்டுக்குள் முற்றமும்
வேடிக்கை இழக்காத மனசும்
விடுமுறை நாளுக்காய்த்தவமிருக்கும்.
உன்னைக் காதலித்து இழந்த பின்னும்
தேற்றும் முற்றம்!
எங்கோ ஒரு நகரின்
இயந்திரப் பரபரப்பில்
நீ
என்றேனும் ஜன்னலைத் திற!
என்னைப் போலவே
மழை நாளில் உனக்கும் வரும்
என் நினைப்பு!.
January 29, 2010
காதலின் வர்ணஜாலம்

January 28, 2010
ஏனென்று சொல்லத் தெரியவில்லை

January 26, 2010
காற்று கவிதைகள்

January 25, 2010
யாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்

தொட்டு கொஞ்சி நகரும் பெண்ணுக்கு மட்டும்..
மணமாகிய பின் ஏன்
குழந்தை இல்லை?
பிறந்த வீடு வந்துதிரும்பும்போது எல்லாம்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.
'அசடு' என்று பெயர் வாங்கியசிநேகிதன் கூட
இரு குழந்தைகளுடன் போகிறான்.
திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்..
யார் குழந்தையோ
'அம்மா' என்று அழைக்கும்போது..
வீதியில் கவனிப்பாரற்று
ஓடி வரும் மழலையை
வாரி எடுத்து ஒப்படைக்கும்போது..
எலுமிச்சை மூடியில்விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை என்கிற
நம்பிக்கையில்சுதந்திரமாய் அழும்போது..
நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!
January 23, 2010
விலகாதே ப்ளீஸ் !

அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.
வழக்கமாய் அவன் வந்தாலே எங்கள் குழுவே புத்துணர்ச்சியாகி விடும். கடி ஜோக்ஸ்..முதல் சீரியஸ் ஜோக்ஸ் வரை எடுத்து விட்டால் நேரம் போவதே தெரியாது. நகைச்சுவை சம்பவங்களை அவன் விவரித்தால் சிரித்து சிரித்து கண்ணில் நீர் வரும்.
சமீப காலமாய் அவனைப் பார்க்கவே சகிக்கவில்லை.
'அவளுக்கு என்னைப் பிடிக்கலைடா' என்றான் முனகலாக.
யாருக்கு.. மண்டையைக் காய்ச்சியதில் அவன் காதலிப்பதாகச் சொன்ன பெண் ஞாபகத்துக்கு வந்தாள்.
'அவளை தொலைவுல பார்த்தாலே கண்ணு பளிச்சிடும்.. பேசினா உற்சாகம்.. நினைச்சா சும்மா ஜில்லுனு ஒரு பீலிங் .. இதெல்லாம் எனக்குத்தான் வருது.. ஆனா அவ நானாப் போய் பேசினாத்தான் பேசறா.. அதுவும் விளக்கெண்ணை குடிச்ச மாதிரி முகம்.. இதுவே வேற ஆள்கிட்ட பேசும்போது.. நான் முதல் முதல்ல அவகிட்ட எதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆனேனோ.. அந்த கண் சிமிட்டல்.. பேசும்போதே ஒரு சுவாதீனம்.. இப்ப அது மிஸ்ஸிங்.. டோடலா..'
'நீயா கற்பனை பண்ணிக்கறே' என்றேன்.
'ப்ச்.. நான் பொய் சொல்லல..'
'ஒரு வேளை உன்கிட்ட அவ இயல்பா இருக்காளோ என்னவோ.. மத்தவங்க கிட்ட தன்னோட ரியல் பீலிங்ஸ் காட்டாம.. உரிமையா உன்கிட்ட மட்டும் காட்டிகிட்டு.. நம்மால எப்பவுமே சிரிச்சுகிட்டு இருக்க முடியாதுப்பா.. ஹியூமன்லி இம்பாசிபிள்'
'நாட் ஆல் 24 ஹவர்ஸ்..'
'சரி.. அவகிட்ட பேசவேண்டியதுதானே'
'டைம் கொடுத்தாத்தானே'
'நான் ஒண்ணு சொல்லவா.. நீ சொல்றது நிஜம்னு வச்சுகிட்டா.. அவளுக்கு இப்ப உன்னைப் பிடிக்கலைன்னா.. விலகிடேன்..ஏன் மனசைக் குழப்பிக்கணும்'
அவன் கண்கள் கலங்கிப் போய் விட்டன.
'நான் அவளை மனப்பூர்வமா நேசிக்கறேண்டா'
வேலையில் புலி இந்த நிமிஷம் பூனைக்குட்டி போல பம்மியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிராஜக்ட் முடிப்பதில் சமர்த்தன். நட்பு வட்டத்தில் யாருக்கு எந்த மனஸ்தாபம் வந்தாலும் முன்னே நின்று கை குலுக்க வைத்து விடுவான். பிரச்னை என்று சொல்ல ஆரம்பிக்குமுன்னே தீர்வு சொல்வதில் கில்லாடி. சூழலைக் கலகலப்பாக்குவதில் அவனுக்கு நிகர் அவனே.
ஒருமுறை எனக்கு உடம்பு முடியாமல் ஹாஸ்பிடலில் சேர்த்தபோது இரவு முழுக்க கண் விழித்து, ட்ரிப்ஸ் கண்காணித்து, நர்சை அழைத்து வந்து.. உடம்பு சற்று தேறியதும் முதல் இட்லி அவன் தான் ஊட்டி விட்டான்.
'நான் பேசிப் பார்க்கட்டுமாடா'
'வேணாம்டா'
எனக்கு ஒரு குழப்பம்.. ஒரு ஆணாய்த்தான் இந்தக் கேள்வி. (பெண்கள் தரப்பில் இதைப் போலவே எதிர் வினைகள் இருக்கக்கூடும்.)
'அது ஏன் ஒருத்தியை லவ் பண்றேன்னு ஒரு ஆண் கமிட் பண்ணதும் உடனே நோகடிக்கறாங்க..'
லவரை மட்டுமல்ல.. மனைவியா வந்தாலும்.. மறு மாசமே 'இந்த ஆளை எப்படி இத்தனை வயசு வளர்த்தாங்களோ தத்தியான்னு' கமெண்ட்!
என் பக்கத்து இருக்கை அம்மணி காலையில் ஆபிஸ் வந்ததும் (மணமாகி ஒரு வருடம் கூட முடியவில்லை) 'பாவா'வைத் திட்ட ஆரம்பிச்சா.. சாயங்காலம் ஆபீஸ் முடியறவரை வசைமாரிதான்.
'எதுக்கும் துப்பில்லை'
தனக்குத்தான் அறிவில்லை.. சுயபுத்திதான் இல்லை.. சொல்பேச்சு கேட்கலாமில்ல.. மாடியிலேர்ந்து குதின்னா சொல்றோம்..'
இதே ரீதியில் வசனங்கள்.எல்லாப் பெண்கள் பற்றிய விமர்சனம் இல்லை இது.. இதே போல ஆண்களிலும் கொடுமைக்காரர்கள் உண்டு.
என் குழப்பம் எல்லாம்.. நான் கேள்விப்பட்ட / பார்த்த மனிதர்கள் பற்றி..
நேசிப்பை சொன்னதும் ஆணோ.. பெண்ணோ.. சற்று விட்டேத்தியாய் மாறிப் போவதேன்?
இந்தப் பதிவில் நான் என் நண்பன் சார்பாகப் 'பெண்ணைப் பற்றி' மட்டும் கேட்க நினைத்தேன். இரு தரப்பு பதில்களும் மன வெளிச்சம் கொடுத்தால் சந்தோஷம்தான்.
காதல் என்பது கடைசி வரை அல்லவா ஜீவராசிக்கு.. முதுமையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழும் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால்.. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய்.
ஏன் ஆரம்பிக்கிறது 'விலகல்' - நேசிப்பு பகிர்ந்த மனிதரிடையே..
பதில் சொல்லுங்களேன்.. பிளீஸ்.
January 22, 2010
சந்தேகப் பிராணிகள்

டிவியில் ஓடி வரும் குட்டி நாய் பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தெருவில் செயின் கட்டி நடந்து வரும் நாய் சகித நண்பர்களைப் பார்த்தால்.. 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று ஒதுங்கிப் போகத் தோன்றுகிறது.
அது போகட்டும்.. எனக்குத் தெரிந்ததெல்லாம் "சந்தேகப் பிராணிகள்தான்" என்றேன்.
நண்பர் முறைத்தார்.என் அலுவலகத்தில் தனது மேஜையை பூட்டி விட்டு இழுத்து.. இழுத்து.. இழுத்து.. பார்க்கும் ஒரு நண்பரைப் பற்றி சொன்னேன். "அவர் இழுக்கிற வேகத்துல பூட்டியிருந்தாக் கூட டிராயரே வெளியே வந்திரும்போல.."
இதில் அவருக்கு நம்பிக்கை குறைந்து.. பூட்டியபின் அதன் சாவித் துவாரத்தை திருப்பி அமைப்பது.. ஒரு நூல் எடுத்து சுற்றி வைப்பது.. என்றெல்லாம் ஆரம்பித்தார்.
இன்னொரு நண்பர் ரொம்ப மும்முரமாய் எதையோ சந்தேகத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.பாவமாய் இருந்ததால் அருகில் போய் "என்ன காணோம்" என்றேன்.
"அதான் மறந்து போச்சு.. இருந்தாலும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தால் ஞாபகம் வந்துரும்னு.."
இன்னொரு தம்பதிகள். இரண்டு பேருமே எங்கள் அலுவலகம்தான். வெவ்வேறு பகுதிகளில் பணி. மனைவி சற்று லேட்டாக வீடு திரும்பி விட்டால் போச்சு. வீட்டு வாசல் கதவைப் பூட்டி விடுவார். என்ன கெஞ்சினாலும் திறக்க மாட்டார்.
சக (பெண்) அலுவலகருக்குக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சூட்டு விழாவிற்கு வற்புறுத்தி அழைத்துப் போனோம். வரும் வழியெல்லாம் அவர் புலம்பல். 'இன்னிக்கு என்ன ஆகுமோ'
அதே போலத்தான் நடந்தது.. கதவைப் பூட்டி கணவர் உள்ளே. பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்க இவர் அவமானத்தில் நெளிய.. ஒருவழியாய் இவர் மன்னிப்பு கேட்டு 'இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்' என்று வாக்குறுதி கொடுத்தபின் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கப்பட்டார். மறு நாள் நாங்கள் மன்னிப்பு கேட்டோம் அவரிடம். வற்புறுத்தி அழைத்துப் போனதற்காக.
கிளைமாக்ஸ் என்னவென்றால்.. இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள் இப்போது. கணவர் நடக்க முடியாமல் படுக்கை. மனைவி சிச்ரூஷை! எதற்கும் அவர் தயவில்!
இயற்கை தன் விதியை சுலபமாய் எழுதி வைத்திருக்கிறது.
எனக்கு ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றல் கிடைத்ததே ஒரு சந்தேகப் பிராணியால்தான்.
நானும் என் இம்மீடியட் பாஸும் ஏதோ ஒரு சம்பவத்தை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் பகுதி மேலாளர் உடனே என்னை மட்டும் அழைத்தார்.
"இப்ப என்னைப் பார்த்துத் தானே சிரிச்சே"
என்ன மறுத்தும் நம்பவில்லை. வேறு நபர்களும் எனக்கு ஒத்தாசைக்கு வரவில்லை. என் பாஸ் உள்பட.
திகைத்துப் போயிருந்தார்கள்.
எனக்கு அழுகையே வந்து விட்டது.
வடிவேலு காமெடி போல சரமாரியாக அவர் ஆங்கிலத்தில் திட்ட அதற்கு அர்த்தம் வேறு பாதி புரியாமல்.. 'யெஸ்.. யெஸ்.. நோ.. நோ..' என்று சமாளித்து முடிவில் சொல்லிவிட்டேன்.
"ஸார்.. இஃப் யூ டோண்ட் பிலீவ் மீ.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ டு வாட் யூ விஷ்"
எனக்குக் கோபத்தில் சுமாராய் இங்க்லீஷ் வரும்!
உடனே என்னை மாற்றி விட்டார்கள், இவர் சொன்னதால்.
அதுவும் அடுத்த பகுதி மேலாளர் இதைக் கேள்விப்பட்டு.. ' நான் அவரை எடுத்துக்கறேன் ' என்று சொன்னாராம்.
அப்புறம் என்ன.. ஒரு சந்தேகப் பிராணியிடமிருந்து தப்பிய எனக்கு சகாக்கள் வந்து வாழ்த்தி விட்டு போனார்கள்.
ஆமா .. ஒரு சந்தேகம் ..
சந்தேகப் பிராணிகள் எல்லாம் எந்த காட்டைச் சேர்ந்தவை?!
January 21, 2010
கவிதை பிடிச்சிருக்கு

January 20, 2010
பேசு..

".. குரு மேடு நன்கு உச்சம் பெற்று அமைந்து இருக்கிறது.. . வியாபாரத் துறையில் நல்ல முன்னேற்றம்.. அதிக லாபம்.." என்று சொல்லிக் கொண்டே போனான்.
லக்ஷ்மி கைக்குழந்தையுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்
விழித்துக் கொண்டு சிணுங்கிய குழந்தைக்கு 'ஊம்..ஊம்..' என்று அவள் வாய் ராகம் பாடியது.
உடல் கசகசத்தது. மனப் புழுக்கம் அதற்கு மேல். ஜோசியன் இதற்குப் பதில் சொல்வானா?
தாலி கட்டியவன் ஒரு மாதமாய் அவளுடன் பேசவில்லை. சின்ன விஷயம். சொல்லி விட்டு போன வேலையை செய்து வைக்கவில்லை. மாலையில் வந்தவன் கேட்டான். பேசாமல் மனசாட்சி உதைக்க தலை குனிந்து நின்றாள்.
அவனுக்கு முணுக்கென்றால் கோபம் வரும். வார்த்தைகள் இரையும்...ஒருமுறை.. மறுமுறை பட்டினி கிடப்பான். அன்று பேசாமல் போய் விட்டான்.
பிறகுதான் அன்று அவன் விதித்த தண்டனை புரிந்தது. ஒரு மாதமாகிறது அவளுடன் பேசி.
'கோபமா .. எதிரே கூப்பிடு .. நன்றாகத் திட்டு. ரெண்டு அடி வை. பேசாமல் என்னைப் பலவீனப் படுத்தாதே.' என்று கண்களால் கெஞ்சினாள்.
அவன் குறிப்பறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் அந்த ஒரு மாத காலத்திலேயே உருக் குலைந்து போனாள்.
கடவுளே இந்தக் கஷ்டம் .. இந்த தண்டனை எப்போது தீரும்.. மறுபடியும் எப்போது மனம் மாறிப் பேசுவான்.. கசகசத்துப் போன ரூபாய் நோட்டுகளைப் பிரித்து நீவி விட்டாள்.
பத்தே நிமிடத்தில் எதிர்காலம் தெரிந்து கொணடவன் விலகிப் போக லக்ஷ்மி அவனெதிரே போய் நின்றாள்.
நிமிர்ந்தவன் அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டு போனான்.
கையை நீட்டினாள்.
"பலன் சொல்லுங்க.. புருசன் அன்பா நடந்துக்குவாரா.. வாழ்க்கை நல்லபடியா இருக்குமா.. உங்க மனைவியா வரல.. பலன் கேட்கிறவளா வந்திருக்கேன்.. பேசுங்க.. ஏதாவது பேசுங்க.. என்று குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
மீண்டும் விழித்துக் கொண்ட கைக் குழந்தை இருவரையும் பார்த்து சிரித்தது.
January 18, 2010
பெயர்க் காரணங்கள்

பெயரியல் நிபுணர்
என் பெயரை
மாற்றச் சொன்னார்
மறுத்தேன் ..
'புஜ்ஜி' என்றாய் ..
மகிழ்கிறேன் !
*******************ஆயிரம் முறை யோசித்து
அத்தனை பேரும்
கலந்து பேசி
வைத்த பெயர் சொல்லி
அழைப்பதில்லை வீட்டில்..
யாரும் கேட்டால் ..
'தம்பி வெளியே போயிருக்குப்பா' !
January 16, 2010
ஒரு மழை நாளில்

January 15, 2010
கோபம் வராமல் இருக்க என்ன வழி ?

நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..
அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'
எனக்கு ஆச்சர்யம்.
"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"
"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"
பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.
"அப்புறம் பிரச்னை இருக்காதே"
"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"
என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.
ஒரு எம்டிகிட்ட போனேன்.
"ஏன் கோபம் வருது"
"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"
"புரியல.. என்ன சொல்றீங்க"
"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."
கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.
"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"
"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"
"உங்களை அமைதிப்படுத்தத்தான்"
"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"
"சொல்லுங்க"
"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"
டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.
"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.
நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..
நற,,நற..
ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..
January 14, 2010
அம்மா

மடிக்கும் போதெல்லாம்
நினைவில் வந்து
உறுத்துகிறது
இல்லாத ஆடைகள்..
அம்மாவின் மறைவு!
எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மாவிடம் விடை இருந்தது..
அம்மா இல்லாமல் போனதும்..
இருப்பதெல்லாம்
ஒரே கேள்விதான்..
எங்களை விட்டு
எங்கே போனாய்..?
இப்போதெல்லாம் சுலபமாய்
மற்ற பெண்களை
'அம்மா' என்றழைக்க முடிகிறது..
இருப்பதைத் தொலைத்து விட்டு
இல்லாத நேரம்தான்
ஞானம்
நம் போல்வார்க்கு!
( 50 வது பதிவு.. உற்சாகப்படுத்தும் அன்பு நண்பர்களுக்கு நன்றி கலந்த கண்ணீர்த் துளிகள் சமர்ப்பணம் ! )
January 13, 2010
காதல் வெல்லட்டும்

January 12, 2010
மறதிக்கு மருந்து இருக்கா?

எப்படியும் மாசத்துல ரெண்டு பேர் இந்த டயலாகை சொல்லிடறாங்க என்கிட்டே..
எனக்கோ அவங்களை பார்த்த ஞாபகமே இல்லை.
'இருக்காதே' என்றால் விடமாட்டார்கள்.என் பூர்வீகம்.. நான் படித்த ஸ்கூல்.. கல்லூரி.. வசித்த தெரு.. எல்லாம் விசாரிப்பார்கள்.
கடைசியா 'இல்ல.. உங்கள நான் எங்கேயோ பார்த்திருக்கேன்..' என்று சொல்லி விட்டு போவார்கள்.
'எப்படி சமாளிக்கிறான் பாரு..' என்று நான் பெருமூச்சு விட்டாலும் ஒரு தடவை என் மனைவியிடம் மாட்டிக் கொண்டேன்.
'அது எப்படிங்க.. அவ்வளவு உறுதியா சொல்றாங்க.. ஆனா நீங்க இல்லேங்கிறீங்க'
"நீயே பார்த்தீல்ல.. அவரால எதுவும் பேச முடியல"
"நீங்கதான் அவரைக் குழப்பிட்டீங்களே"
"அய்யோ.. அவரே தேவல போல இருக்கே.."
"எனக்கு என்ன டவுட்டுன்னா.. "
"வேணாம்.. சொல்லாத"
சந்தேகப் பார்வையுடன் அவள்.
ஏதோ ஒரு சினிமாவில் இப்படித்தான் பஸ்ஸில் போகிறவரிடம் "எலே.. நல்லா இருக்கியா" என்று வரிசையாய் கேட்டுவிட்டு பஸ் போனதும் சொல்வார். 'பாரேன்.. பஸ்ஸுல உட்கார்ந்ததும் தூங்கறத.. இப்ப நான் யாருன்னு மண்டை காஞ்சிகிட்டு போவான்ல"
எனக்கு இப்பவும் அவ்வளவாய் ஞாபகசக்தி இல்லை.. அதுவும் குறிப்பாய் என் உறவுக்காரர்கள் பற்றி.
'என்னை யாருன்னு சொல்லு'
"வந்து.."
'பார்த்தியா.. அதுக்குள்ளே மறந்துட்டே.. போன மாசம் நெய்வேலில ஒரு கல்யாணத்துல பார்த்தோமே'
"நான் போன மாசம் எங்கேயும் போகலியே"
'என்னைதான் ஞாபகம் இல்ல.. கல்யாணம் அட்டெண்ட் பண்ணதும் மறந்துருச்சா..'
என் மனைவி பக்கம் திரும்பி 'நல்ல டாக்டரா பார்த்து காட்டும்மா'
'நீங்க வேற.. அவருக்கு என்னையே ஞாபகத்துல இருக்கிறதில்ல''
ஆபீஸ் முடிஞ்சு கரெக்டா வீட்டுக்கு வந்திடறார்தானே'
ஒருத்தன் மாட்டினா அவனை வச்சு காமெடி பண்ணி சிரிக்க ஒரு கூட்டமே இப்ப கிளம்பி இருக்கு.
சோதனை என்னவென்றால் என்னை விசாரிக்கிற அத்தனை பேரும் துல்லியமாய் என் பனியன் சைஸ் முதல் சொல்லிவிடுகிறார்கள்.
எனக்கு அவர்களின் பிள்ளைகள் பெயர் ஞாபகம் வருவதில்லை.
என் நண்பனின் மனைவி பெயர் ராஜி .. பெண் அகிலா.. ஆனால் எனக்கு அதில் எப்போதும் குழப்பம்.. பெண் அகிலா.. வொய்ப் ராஜி.. என்று மாற்றி அழைத்து.. ஒரு முறை பெண்ணை ' ஹாய்.. ராஜி செல்லம்.. நல்லா இருக்கியாம்மா' என்று கேட்கப் போக, ஏன் அத்தனை பேரும் என்னை முறைக்கிறார்கள் என்று முதலில் புரியவில்லை.
சரி.. இந்தத் தொல்லைக்கு பார்க்காத மாதிரி போகலாம் என்றால்.. 'என்ன ஆச்சு.. அவருக்கு.. மூஞ்சிய திருப்பிகிட்டு உர்ருன்னு போறாரு' என்று கமெண்ட்!
வல்லாரை.. மெமரி பில்ஸ் எதுவும் வொர்க் அவுட் ஆகல. சிரசாசனம் பண்ணுன்னு சொல்ல.. தலைகீழா நின்னு கழுத்து சுளுக்கினதுதான் மிச்சம். மனசுக்குள்ள திருப்பி திருப்பி சொல்லி பாருன்னு சொல்ல.. அதை ட்ரை பண்ணப் போக.. 'இவன் ஏன் தனியா பேசிகிட்டு இருக்கான்னு' விமர்சனம் வந்தாச்சு.
உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க.. ஞாபகசக்தியை வளர்த்துக்க என்ன வழி?
"எனக்கு கடன் கொடு .. தன்னால இன்க்ரிஸ் ஆகும்னு ' கடிக்கக் ' கூடாது !
(இந்தப் பதிவை எழுதி வைத்து ரொம்ப நாளாச்சு.. பிளாகில் போட இப்பதான் நினைப்பு வந்தது..)
January 10, 2010
சங்கீத சாம்ராஜ்யம்

January 09, 2010
மனப் பறவை

January 07, 2010
மண்ணில் சொர்க்கம்..

ஆண் .. பெண் இரு பாலருமே..
என்ன கஷ்டமோ என்று மனசு முதலில் சங்கடப்பட்டது.
மனசு விட்டு பேச சரியான நண்பர் வட்டம் இல்லாத குறை.. உணர்வுகளைப் பகிர ஆட்கள் இல்லாத தனிமை..
ரொம்ப பேர் பாருங்க.. நாம என்ன சொல்ல வரோம்னே கேட்காம தீர்வு சொல்ல ஆரம்பிச்சுருவாங்க.. அப்பவும் இதே சிரமம் தான்..
தவறிப் போய் யாராச்சும் நாம சொல்றத முழுசா கேட்டாங்கன்னா.. ஏதோ ஒரு உள் குத்து இருக்குன்னு அர்த்தம்..
அரைமணி நம்ம பேச்சை கேட்டப்புறம் "கை மாத்தா ரூபா தரியா.. புழைச்சுக் கிடந்தா இந்த ஜன்மத்துல வசூல் பண்ணிக்க.." என்று கை நீட்டி விடுவார்கள். தர இயலாமையைச் சொன்னால்.. நாம பேசாததை எல்லாம் பேசினதா போட்டு விட்டுருவாங்க.
இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இப்படி தனியா பேசிகிட்டு போகற மெதட் கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு கூட தோணிச்சு.
'அரை மணி தியானம் பண்ணு தெனம்.. மனசு அமைதியாயிரும்..'
உட்கார்ந்து பார்த்தா.. அப்பதான் ஊர் விவகாரம் முழுக்க மனசுல சீரியல் ரேஞ்சுல ஓடுது.
'அட.. ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப் போக செட்டிலாயிரும்' இப்படி சொல்லி உசுப்பேத்தி விட்டாங்க.
'உட்கார்ந்து தூங்க நல்ல வழி கண்டு பிடிச்சுட்டான்னு' கெட்ட பேர் வந்திச்சு. (தூங்கினதும் உண்மைதான்!)
இன்னொருத்தர் என்னை கூப்பிட்டு நானும் அவருமா பிராக்டிஸ் பண்ணலாம்னு எதிரும் புதிருமா உட்கார்ந்தோம்.அரை மணி ஓடிச்சு. (அவங்க வீட்டு டிபன் நல்லா இருக்கும்)
என்னவோ தெரியல.. முடிச்சுக்கிற நேரத்துல நீல கலர்ல ஒரு பெரிய உருண்டை சைஸ்ல.. பலூன் மாதிரி கண்ணுக்கு முன்னாடி வந்து வெடிச்ச மாதிரி ஒரு பீலிங் ..
கண்ணத் தொறந்தா அவரும் அதே தான் சொன்னாரு.. என்ன ஒத்துமை.. தியானம் பண்ணறச்ச இப்படி நீலக் கலர் வந்தா அதுல முன்னேற்றம்னு ஒரு நண்பர் சொன்னாரு..
கூடவே இதுவும் சொன்னாரு.. இப்படி ஆராய்ச்சி பண்ணாம எதுவும் எதிர்பார்க்காம தியானம் பண்ணுங்க.. எது கிடைக்குதோ இல்லியோ மனசு அமைதி ஆகும்.. அனாவசியமா யாரையும் காயப் படுத்த மாட்டீங்க.. மத்தவங்க உங்களைக் குறை சொன்னாலும் பெருசா பாதிப்பு இருக்காது மனசுலன்னாரு. அந்த வார்த்தைகள் புடிச்சிருந்தது..
இப்பல்லாம் தினசரி தியானம் பண்ணமுடியல..
ஆனா.. மனசுல அந்த வார்த்தைகள் ஒரு மாயாஜாலம் பண்ணிருச்சு. மத்தவங்களை எப்பவும் நேசிக்கணும்னு ஒரு உறுதி வந்திச்சு.
அதனாலதான் இந்தப் பதிவின் முன்வரியில தனக்குத்தானே பேசிகிட்டு போன ரெண்டு மூணு பேரை புன்னகையோட நிறுத்தி பார் சாக்லேட் கொடுத்து 'எனக்கு இன்னிக்கு பர்த் டே.. பிளீஸ் வாழ்த்துங்கன்னேன்' நம்பமாட்டீங்க..
அவங்க என் மேல கோபப்படல. அவங்க சிரிப்பு .. கொஞ்சம் வெட்கம் கலந்து.. இப்பவும் கண்ணுல நிக்குது..
இதுவரை பழகாத நபர்களை சினேகம் பண்ணிக்கற மனசிருந்தா போதும்.. சொர்க்கம் வேற எங்கேயும் இல்லை..
January 06, 2010
சிநேகிதியே

என் சிநேகிதியைப் பார்க்க அவள் வீட்டுக்கு போனபோது சிரிக்காமல் சொன்னதுதான் மேலே கொடுத்த கமெண்ட்!வேலைக்கு போய்க் கொண்டிருந்தவள் வேலையை விட்டாள்.
விருப்ப ஓய்வு.. மகள்.. மகனுக்கு திருமணம் செய்தாள் ..
எதையுமே இயல்பாக எடுத்துக் கொள்ளும் அவளுக்கு கவிதை.. கதைகளில் ஆர்வம்.
'நீ எழுதலாம்பா ' என்றால் சிரிப்பாள் .
"லெட்டர் எழுதவே சோம்பேறித்தனம் .. கதை எல்லாம் உனக்குத்தான்.."
ஆனால் பேச்சில் சரளமாய் வார்த்தைகள் வந்து விழும்..
என்னைவிட வயதில் மூத்தவள் என்கிற உணர்வே எனக்கு வராது.. அத்தனை சௌஜன்யம் ..
இயற்கை அதன் போக்கில் விளையாட்டு விதிகளை எழுதி வைத்திருக்கிறது ..
என் சினேகிதிக்கும் ..
அவள் மாமியார் !
பத்து வருடங்களாய் படுத்த படுக்கை..
அதற்காகத்தான் இவள் தன் பேங்க் வேலையை விட்டதும்.
பக்கத்திலேயே இருந்து ஒரு குழந்தையைப் பராமரிப்பது போல பார்த்துக் கொண்டாலும்.. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவள் மாமியார் மனநலமும் பாதிக்கப்பட்டதில் ..
'டிவி போடாதே ..'
'பக்கத்திலேயே ஒக்காரு ..'
சமைக்க.. அல்லது தன் வேலைகளுக்கு எழுந்து போனால் ..
'அதுக்குள்ளே எங்கே போயிட்ட'
'ஏண்டி.. நான் படுத்துட்டா வாய்க்கு ருசியா எதுவும் தரக் கூடாதா..'
'என்னம்மா வேணும் '
'கை முறுக்கு '
அடுப்படி போனால் 'எங்கேடி போயிட்ட .. வா.. எம்பக்கத்துல உக்காரு..'
சிநேகிதியின் கணவன் வெளியூர் மாற்றல்.. மாதம் ஒரு முறை வந்தவர்.. இப்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வருகிறார்.. ' தன் அம்மாவையே அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை..
'கோவிலுக்கு போவியா ' என்று நான் கேட்டேன் ஒரு முறை.
புன்னகையுடன் சுவர் படத்தைக் காட்டி கை கூப்பினாள்.
இது எல்லாம் 'அவள் தலைவிதி ' என்று உறவினர் சிலர் தீர்ப்பு வழங்கி விட்டார்கள் ..
'உனக்கு கஷ்டமா இல்லியா.. '
கேட்டிருக்கக் கூடாதுதான் .. கேட்டு விட்டேன்.. பொறுக்க மாட்டாமல் ..
'நீ என் பிள்ளையா இருந்தா எனக்கு செய்வாய் தானே ..'
என் கண்களில் நீர். தலையாட்டினேன் பேசாமல்..
'அதைத் தானே இப்ப நான் செய்யறேன்.. '
இப்போது அவள் புன்னகை சற்று கூடுதலாகவே ஜொலித்தது.
January 03, 2010
மீட்டெடுப்போம்

January 02, 2010
உன் வருகைக்காக
