1. அதன் கண்களில்
ஒரு கெஞ்சல் இருந்தது..
சிறிது நேரம்
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்
என்ன செய்வதென்று புலப்படாமல்..
என் தயக்கம் பார்த்து
வினாடி நேரத்தில்..
ஆம்.. வினாடி நேரத்தில்
அதன் கண்களில்
மின்னி மறைந்த கேலி..
என்னைக் குறித்த
அதன் விமர்சனமாய்..
நிராகரித்து நகர்ந்தபோது
எனக்குத்தான்
அதிகமாய் வலித்தது..
அந்த புறக்கணிப்பு !
2. ஒரு நேரத்தில்
ஒரு கவலை
என்றுதான்
வகைப்படுத்திக் கொண்டேன்..
எனக்கும் அதுவே
வசதியாய் இருந்தது..
இப்போதெல்லாம்
ஓடி வந்து
மடியில் விழுகிற
அத்தனை மகிழ்ச்சிகளையும்
அப்படித் தள்ள முடியவில்லை !
3. வாயைத் திற..
பல்லைக் கடி இறுக்கமாய்
விட்டு விடாதே..
ம்ம்..
சூழ் நிலையை வாயில் திணித்து
அடிக்க ஆரம்பித்து விடுகிறது
வாழ்க்கை விளையாட்டு..



