August 10, 2012

எழுதாத கவிதை





எழுதப்பட்ட
எல்லாக் கவிதைகளிலும்
ஒரு சில
வாசிக்கும் நிமிடம் உயிர்த்து..


மறு சில
மீள் வாசிப்பில்
அடையாளம் காட்டி..
சிலவே
ஞாபகத்தில் உறைந்து..

எப்போதும் ஜீவனுடன்
எழுதப்படாத
கவிதைகள் மட்டுமே.