December 07, 2012

வனதேவதை

வன தேவதையின்

வருகைக்குக் காத்திருக்கிறது

அந்த வனம்..

பசுமை அழிந்த காட்டின்

துளிர்கள்..

பனித்துளிகளினூடே

உயிர்த்திருக்கிறது..

பறவைகள் அறியக் கூடும்


தேவதை வந்தால்..

பட்டாம்பூச்சிகளும்..

தவறிப்போய் ஓரிரு

மானிடர் அறியலாம்..

உன்னைப் போல்..

என்னைப் போல்..

இமை கொட்டாமல்

காத்திருப்போம்

இவ்விருட்டில் விடியும் வரை.