January 11, 2014

இப்படித்தான்...

அந்தப் பாதைக்குத்
தெரிந்தே இருக்கிறது..
உருவாகக் காரணமாய் இருந்த
முதல் காலடி!

துளிர்த்த முதல் இலைக்குப்
புரிகிறது..
நீரூற்றிப் போன கை!

வெட்டிய குளத்தில்
வந்து விழுந்த
முதல் மழைத் துளியை
இன்னமும் ஞாபகம்
வைத்திருக்கிறது ஊருணி !

பழகிப் போன
மனிதரை நினைவுபடுத்த
வேண்டியிருக்கிறது
சில வார்த்தைகளும்..
பலப்பல நினைவுகளும்... !