February 21, 2014

3 கவிதைகள் !

எப்போதோ பேசிக் கொள்கிறோம்..
மூன்று மாதமோ..
ஆறு மாதமோ..
விட்ட இடத்திலிருந்து
தொடங்க முடிகிறது
நம் பேச்சை
எந்த நாளிலும்..
நீயோ நானோ
கேட்டுக் கொண்டதில்லை
ஏன் பேசவில்லை இத்தனை நாளென்று..

எப்படி சாத்தியமாயிற்று
நமக்குள்ளே இப்படி ஒரு அந்நியோன்னியம் ?!




நீ யாரோ
தெரியாது..
உன் முகமறியேன்..
காற்றின் வழி
செவி மோதுகிற
பிடித்த பாடலாய்..
நீ எனக்குப் ப்ரியமாகிறாய்.
உன் பெயர் கேட்க
புன்னகைத்துக் கொள்கிறேன்..
அவ்வப்போது உன் சிரிப்பில்
எனக்குள் முகிழ்க்கிறது
அதே ஆனந்தம்..
நாம் சந்திப்போமோ இல்லையோ..
எனக்கென்று
நீ இருக்கிறாயெனும்
நினைப்பில்
என் திமிருக்கு
சூட்டிக் கொள்கிறேன்
நிரந்தரமாய் ஒரு மகுடம் !



பார்க்காமல்
இருந்திருக்கலாம்..
நேசிக்காமல்
இருந்திருக்கலாம்..
அல்லது
அதைச் சொல்லாமலாவது
இருந்திருக்கலாம்..

இருந்திருக்கலாம் !