December 29, 2010

ஒத்திகை


'இல்லை' என்று மறுக்கவும்

'உண்டு' என்று ஏற்கவும்

அநேக விஷயங்களுடன்

வாழ்க்கை..

அவரவர்க்கான முரண்களை

மூட்டை கட்டி

காலடியில் வைத்துக் கொண்டு

கை குலுக்கிக் கொண்டிருக்கிறோம்.

எந்த நிமிடம் பிரிவு என்பது

தெரியாத புதிரில்

இன்றைய தினம்

குறைந்த பட்சம்

மலர்க் கொத்து ..

இல்லாவிட்டாலும்

ஒற்றை பூ வை

ஏந்திய விரல்களுடன்

எதிரில் வரட்டும்..

சிணுங்கல்கள் அற்ற புன்னகை

சுலபமாய்த் தொற்றிக் கொள்ளும் ..

கண்ணாடி முன் சிரித்துப் பழகிய

ஒத்திகை

வரட்டும் வாழ்நாள் முழுவதும்.