September 17, 2013

நேசம்



எப்பவும் அடுத்தவ்ருக்காகவே
வாழ்ந்தாச்சு..
இதுவரை!
வருத்தமேதுமில்லை....
ஆனால்
இன்னமும்
ஒரு குழல்..
ஒரு மயிற்பீலி..
ஒரு பீதாம்பரம்..
சீந்துவாரற்று !




ஒளித்து வைத்த மயிலிறகு
குட்டி போடப் போவதில்லை என்றாலும் 
ஒளிக்காமல் இருப்பதில்லை 
இந்த மனசு !



ப்ரியம் பூத்திருக்கும் 
பூவைப் பார்க்காவிட்டாலும் 
வாசனை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது 
வாழ்நாள் முழுமையும் !