நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !
March 28, 2010
அஹோபிலம்
இந்த படத்தில் உள்ளதை விடவும் இன்னமும் இடம் சின்னதாகி விட்டது .. இது முன்பு எப்போதோ எடுத்த படம் ..
இதுதான் உக்ர ஸ்தம்பம்!
பக்கத்தில் தெரிகிற பசுமை அதல பாதாளத்தில் உள்ள மரங்கள்.
'இந்த தூணில் இருப்பானா உன் ஹரி ? ' என்று ஹிரண்யன் கேட்டதும் தூணைப் பிளந்து கொண்டு வருகிற நரசிம்ஹர் .. இந்த இடத்தில்தான் வந்தாராம்.. மூன்று பக்கமும் அதல பாதாளம் .. விழுந்தால் சுலபமாய் மேலே போய் விடலாம்.
அடிவாரத்திலிருந்து தம் கட்டி மேலே ஏறி வந்தால்.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மர்.
இரணியனைக் கிழித்ததும் கை அலம்பிய இடம் சிவப்புக் கலரில் பாறை.. குழிவான இடத்தில் நீர்..
பயங்கரமாய் சறுக்குகிற மலை உச்சி ..
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மலை உச்சியை தொட்டால் உக்ர ஸ்தம்பம்..
அதை அடைய வழுக்குப் பறை மீது தவழ்ந்து .. ஒற்றை அடிப் பாதை போல கால் வைத்து நகர்ந்து .. நாலு பக்கமும் ஜிவ்வென்று அடிக்கிற காற்றில் பேலன்ஸ் செய்து ஏறி கீழே பார்க்காமல் அந்த இரும்புக் கம்பியை சுற்றி வந்தால் ' மகத்தான சாதனை' செய்து விட்ட பீலிங் !
நான் போனபோது அடித்து கொண்டிருந்த மழை.
வழிகாட்டி முதலில் மறுத்து விட்டார். வற்புறுத்தியதும் எட்ட நின்று காட்டுகிறேன் என்றார்.
சுற்றி வந்து கீழிறங்கியதும் ஒருத்தர் சொன்னார் .. யாரோ ஒரு பெண்மணி கீழே விழுந்து சிதறிப் போனதை.. அதுவும் கீழிருக்கும் ஜ்வால நரசிம்மர் பகுதியில்.
அதற்கும் மேலேதான் உக்ர ஸ்தம்பம் !
அடுத்த முறை போவேனா தெரியாது.. பர்வத மலை உச்சியில் அந்த குகைக்குள் 3 நாட்கள் இருந்த அனுபவம் ஒரு விதம் என்றால்.. அகோபிலம் உச்சி உக்ர ஸ்தம்பம் இன்னொரு விதம்..
நமக்கும் அவ்வப்போது த்ரில் வேண்டியிருக்கிறது.. இல்லையா?!
(அஹோபிலம் ஆந்திராவில் உள்ளது. கடப்பா ஸ்டேஷனில் இறங்கி காரில் அல்லது பேருந்தில் பயணிக்கலாம். அப்படித்தான் நான் போனேன். )
March 27, 2010
நுனிப்புல்
என்ன ஒரு அவசரம்
உங்களுக்கு
சொல்லி முடிப்பதற்குள்
சொல்லாத அர்த்தங்களை எல்லாம்
யூகித்து
பாராட்டோ ,
வசவோ
தந்து விடுகிறீர்கள் ..
அத்தனை வார்த்தைகளிலும்
ஊடுருவி நிற்பது
சொல்லப்பட்டும்
சொல்லப்படாமலும்
உங்கள் மீதான
பிரியமும் நேசமுமே ..
இருக்கும் ஒரு தேநீரை
பகிர்ந்து நாம்
குடிப்பதற்குள்
விலகிப் போகட்டும்
தொண்டைக்குழியில்
திணறிக் கொண்டிருக்கும்
விமர்சனங்கள்..
இழுத்து விடும் மூச்சில்
புதிதாய் பூக்கட்டும்
இன்று கண்டெடுத்த
நம் ப்ரியம்
March 21, 2010
நுகத்தடி மாடுகள்
March 19, 2010
தேஜஸ்
இடித்து முட்டி
தள்ளிக் கொண்டிருந்தார்கள்..
எவரிடமும் பொறுமை இல்லை..
'வரிசையில் போகலாமே' என்று
இரைச்சலுடன்
இன்னும் சிலர்
முன்னேற பார்த்தார்கள்..
சிலர் கரங்களில்
சிபார்சுக் கடிதங்கள் கூட !
உடல் உபாதைகள் சொல்லி
சிலர் வழி கேட்டார்கள்..
நெரிசலான அந்த பாதையில்
நசுக்குண்டு நின்றாலும்
யாரும் விட்டு தருவதாய் இல்லை..
பார்த்த உடன் என்ன கேட்பது என்று
மனசுக்குள் பிரார்த்தனை மூட்டைகள் ..
வியர்த்துக் கொட்டியதில்
குளிர் வசதிக்கு உள்ளூர
மனசின் ஏக்கம்..
குழந்தைகள் உள்ளே செல்ல மறுத்து
அடம் பிடித்தார்கள்..
'சனியனே .. இங்கேயே நில்லு பத்திரமா'
விட்டு செல்லும்போது
தாடி வைத்த அந்தப் பெரியவர் சொன்னார்..
'கவலைப் படாம போங்க .. நான் பார்த்துக்கறேன்..'
குழந்தைகள் கேட்ட எல்லாமும்
விரல் சொடுக்கில்
வரவழைத்துக் கொடுத்தவரின்
கண்களில் காருண்யம்..
இருட்டில் தீப ஒளியில் பார்த்துத்
திரும்பியவர்களிடம் முனகல்..
'விக்கிரகத்துல பழைய தேஜஸ் இல்லியே '
March 16, 2010
ஆபீஸ் பூனை
March 14, 2010
பத்து பெண்கள்
தொடர் பதிவிற்கு அழைத்த 'காவ்யா' விற்கு நன்றி!
காளியம்மாள் டீச்சர் : என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. வீட்டில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் பள்ளிக்குப் போயிருந்தேன். அத்தை உணவுடன் வர வகுப்பறையின் வெளியே அனுப்பி சாப்பிட வைத்து.. 'உனக்குக் கோபம் கூட வருமா' என்னை முதன் முதலில் செல்லம் கொஞ்சிய வெளி மனுஷி. 'கோபம் கூடாது ' என்று சொல்லவே இல்லை! ஆனால் என் கோபம் திசை பற்றி சொல்லாமல் புரிய வைத்தவர்.
எம். எஸ். : பிறர் சங்கீதங்கள் பற்றி புரிதல் அற்று இருந்தபோது தமது தெய்வீக குரலில் என்னையும் வசீகரித்தவர்.
கமலா செல்வராஜ் : 'அம்மா' என்கிற அழைப்புக் குரல் கேட்கத் தவிக்கும் ஜீவன்களுக்கு ஜீவன் தருபவர்.
பி.டி. உஷா : முதன் முதலில் இந்தியாவை ஒலிம்பிக்ஸில் கவனம் ஈர்த்தவர்.
டயானா : அந்த அழகு இன்னும் பல பேர் மனசில் சிதையாமல் தான் இருக்கிறது..
பி சுசீலா : இவர் குரலில் எத்தனை முறை மனசின் அமைதி மீட்கப் பட்டிருக்கிறது..
மெஸ் மாமிகள் : ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஊருக்கு பந்தாடப் படும்போது அடுக்களை வெப்பத்தில் உருக்குலைந்து சூடாய் சமைத்துத் தரும் 'அன்னலட்சுமி'களின் பெயர்கள் கூடத் தெரிவதில்லை. இவர்கள் சாதனைகளும் எவர்க்கும் சளைத்ததில்லை.
செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !
எனக்கு பிடித்த பெண்கள் பதிவில் சராசரி பெண்கள் பெயர்கள் தான் முதலில் மனசில் வந்தது. பிற பிரபலங்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் தானும் பிரபலம் ஆகி விட்டவர்கள். வாழ்க்கைப் போராட்டத்தில் பூமியில் கால் பதித்து ஒவ்வொரு நாளையும் சுலபமாய் கடந்து போகும் இந்தப் பெண்கள் என்னை சில நேரங்களில் கலங்கடித்து விடுகிறார்கள்.
என் பதிவில் விடுபட்டுப் போன மற்ற பெண்மணிகளுக்கும் சேர்த்து ஒரு சல்யூட் !
March 13, 2010
என்னுயிர்த்தோழி
March 07, 2010
கரைகளை உடைத்து..
என் கரைகளை
உடைத்துக் கொண்டிருக்கிறேன்
எதையும் அழிப்பதற்கல்ல ...
வறண்ட இதயங்களை
நனைப்பதே என் லட்சியமாய்..
ஆனாலும்
மீண்டும் எழும்புகின்றன
எனக்கான கரைகள்
இருபுறமும் இயல்பாகவே..
என்னதான் ஒளித்து
வைத்தாலும்
விதையை
செடியாய் கிளம்பி
இடம் காட்டி விடும்
நிஜமான நேசமும்
அப்படித்தான் !
இருட்டத் துவங்கியதும்
அம்மாக்களின் அழைப்பு
முழுதாய் இருட்டியதும்
வீடு திரும்பிய பிள்ளைகள்
எங்கே போவது
என்று புரியாமல்
நகரும் குட்டி நாய் !
ஒரு தடவையேனும்
சொல்லத்தான் வேண்டும்
கடவுளிடம் நன்றி
மனிதரிடம் நம் நேசிப்பு!
March 06, 2010
மழை வரும்
March 04, 2010
ஒற்றை விரல்
உன்னை விட்டு வைக்கலாம்
காலம் ' என்றேன்..
'போப்பா.. நீங்க
இன்னும் வளரவே இல்லை '
என்றாள் அவள் !
இது வரை
பூக்கத் தெரியாத எனக்கும்
நீர் ஊற்றிப் போகிறது
அந்தப் பெயர் தெரியாத மேகம்..
என் பசுமை அப்படியே
உதிர்ந்த இலைகளுக்குப் பின்னும்.
March 01, 2010
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட்
(கல்கி வைர விழா சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை)