May 08, 2014

கவிதைகள்

சொற்களைக்
கவிதைக்காக
அளவுக்கதிகமாய்ப்
பிசைந்து விட்டேனோ..
குழைந்து கிடக்கிறது
இப்போது !



மறுபடி
நீ பேசக் கூடும்
என்பதால்
இந்த நிமிடக் கோபத்தை
இரு கை நீட்டி
ஏந்திக் கொள்கிறே
ன் !


இரவு முழுக்க
கொட்டக் கொட்ட
விழித்திருந்து
பார்த்தேன்..
அந்த மீதிக் கனவு
திரும்ப வரவேயில்லை !