July 31, 2011

காலம்


ஒரு மரணக் கிணற்றில்
தள்ளி விட்டு
வேடிக்கை பார்க்கிறது
காலம்..
கை தூக்கி விடும்
ஒரு கவிதையை
எதிர் நோக்கி
அதன் விளிம்பில்
என் விரல்கள்!


ஒவ்வொரு இரவிலும்
வந்து
எல்லாக் கனவுகளுக்கும்
வர்ணம் பூசிப் போகிறான்
அவன்..
கொண்டு செல்லும்
காலி டப்பாக்களில்
நிரம்பி இருக்கிறது
இன்னொரு நாளுக்கான
நம்பிக்கைகள்..
வெண்ணிறம் அப்பிக் கொண்டு!



July 28, 2011

மலரும் முட்களும்


கடவுளுக்கான வாசலை
திறந்தே வைத்திருக்கின்றன
இறை தத்துவங்கள்..
வழியெங்கும்
முட்களை இறைத்தபடி
போகும் மனிதர்கள்.



அரும்பத் தொடங்கியிருந்தது
செடி
ஒரு நள்ளிரவு
மழைக்குப் பின்..
அதன் வேர்களில்
ஒட்டியிருந்தது
பூக்கப் போகும்
மலர்களின் மீதான
என் நேசம்!



July 22, 2011

ரெஜினா ப்ரெட் - 2

என்னை மன்னியுங்கள்..

இதன் ஆங்கில வடிவம் தருகிற முழுமையான உணர்வை என்னால் மொழிபெயர்த்தலில் கொண்டு வர முடியவில்லை.. என் குறைதான்.

அப்படியே வாசிக்கலாமே..


19. It's never too late to have a happy childhood. But the second one is up to you and no one else.

20. When it comes to going after what you love in life, don't take no for an answer.

21. Burn the candles, use the nice sheets, wear the fancy lingerie. Don't save it for a special occasion. Today is special.

22. Over prepare, then go with the flow.

23. Be eccentric now. Don't wait for old age to wear purple.

24. The most important sex organ is the brain.

25. No one is in charge of your happiness but you.

26. Frame every so-called disaster with these words 'In five years, will this matter?'

27. Always choose life.

28. Forgive everyone everything.

29. What other people think of you is none of your business.

30. Time heals almost everything. Give time time.

31. However good or bad a situation is, it will change.

32. Don't take yourself so seriously. No one else does.

33. Believe in miracles.

34. God loves you because of who God is, not because of anything you did or didn't do.

35. Don't audit life. Show up and make the most of it now.

36. Growing old beats the alternative -- dying young.

37. Your children get only one childhood.

38. All that truly matters in the end is that you loved.

39. Get outside every day. Miracles are waiting everywhere.

40. If we all threw our problems in a pile and saw everyone else's, we'd grab ours back.

41. Envy is a waste of time. You already have all you need.

42. The best is yet to come...

43. No matter how you feel, get up, dress up and show up.

44. Yield.

45. Life isn't tied with a bow, but it's still a gift."

Its estimated 93% won't forward this. If you are one of the 7% who will,
forward this with the title '7%'.

I'm in the 7%. Friends are the family that we choose.

If this is told by an elderly person at our home, either we ignore, close our ears or shut their mouth. I am sure all will read this to the end, since it is in forwarded email. Enjoy reading.

One more thing I want to add to this list is; keep always our ears open to two persons; the kids and elders. The act of patient listening satisfy them, whether you act upon that or not.

பொதுவாய் அறிவுரைகளுக்கு நான் எதிர் திசைதான்.
படித்தபோது பிடித்தது .. பகிர்ந்து கொண்டேன்..




July 18, 2011

ரெஜினா ப்ரெட்






ரெஜினா ப்ரெட் - 90 வயசு - எப்பவோ எழுதின 45 புத்திக் கொள்முதல்களை மறுபடி சொல்லியிருக்காங்க.
எனக்குப் பிடிச்சிருந்தது..படிக்க!

1. வாழ்க்கைல அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்ல இல்ல. ஆனாலும் வாழறதுக்கு நல்லாத்தான் இருக்கு.
2. இதுவா அதுவான்னு குழப்பத்துல இருக்கறப்ப.. சின்ன ரிஸ்க்கா தோணற ஒரு முடிவை எடுங்க..
3. ரொம்ப குட்டியான வாழ்க்கை.. இதுல வெறுப்புல நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
4. உங்களுக்கு முடியாம போகறப்ப உங்க வேலை ஹெல்ப் பண்ணாது.. நட்பும் சுற்றமும்தான். எப்பவும் அவங்க தொடர்புலயே இருங்க
5. கிரடிட் கார்ட் அப்பப்ப செட்டில் பண்ணிருங்க
6. எப்பவும் ஜெயிக்க முயற்சிக்க வேணாம்.. 'ஒரு வேளை நீங்க சொல்றாப்லயும் இருக்கலாம்' அப்பிடினு விட்டுக் கொடுங்க
7. தனியா போய் அழறதை விட, பெட்டர் யார்கிட்டயாவது சொல்லி அழறது மேல். துக்கம் ஆறும்.
8. கட்டாயமா கடவுள்கிட்ட கோவிச்சுக்குங்க. அவருக்கு அதுல ஒண்ணும் பிரச்னையே இல்ல
9. முதல் சம்பளத்துலயே ஓய்வுக்கு சேமிக்க ஆரம்பிச்சிருங்க
10. சாக்லேட்ட பார்த்தா 'வேணாம்' மழுப்பாதீங்க. அதாவது பிடிச்சதை சாப்பிடுங்க.
11. கடந்த காலத்தோட அமைதியா கைகுலுக்குங்க. அப்பதான் அது நிகழ்காலத்தை நாசம் பண்ணாது.
12. நீங்க அழறதை உங்க புள்ளைங்க தாராளமா பார்க்கலாம். தப்பில்ல. மறைச்சுக்க வேணாம்
13. அடுத்தவனோட உங்க வாழ்க்கைய ஒப்பிடாதீங்க.. அவனோட 'நாளை' என்னன்னு இப்ப உங்களுக்குத் தெரியாது
14. ஏதாச்சும் ஒரு உறவை ரகசியமா பண்ணனும்னா.. அதைப் பண்ணவே வேண்டாம்.
15. கண் சிமிட்டற நேரத்துல எல்லாம் மாறிப் போயிடும். கவலைப்படாதீங்க. கடவுள் கண் சிமிட்டுவதே இல்லை!
16. ஆழ்ந்த மூச்சு விடுங்க. அமைதி தன்னால வரும்.
17. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சி தராத எதுவா இருந்தாலும் தூக்கி எறிங்க.
18. உங்களுக்கு சாவைத் தராத எதுவும் பலத்தைத் தான் தரும். துணிஞ்சு எடுத்துக்குங்க..


மீதி அடுத்த பதிவுல..


July 15, 2011

தஞ்சை கமருதீன்

ஒரு ஞாயிறு குறுஞ்செய்தியாளர்கள் சந்திப்பில் அவரைப் பார்த்தேன்.
அறிமுகம் செய்து கொண்டோம். எல்லோரும் எல்லோரிடமும்.
மாலை ஒவ்வொருவராய்க் கிளம்பிப் போக நானும் வெளியே வந்தேன்.. அன்றைய நிகழ்வுகள் முடிந்து.
கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி..
‘அங்கே தஞ்சை கமருதீன்னு ஒருத்தர் வந்திருப்பார். அவரோட கண்ணாடி வீடுகள் தொகுப்பு வாங்கிக்குங்க.. அசத்தலான கவிதைகள்..’
அடடா.. அவர் கிளம்பிப் போய் அரை மணி ஆச்சே.. என்று பொருமினேன்.
பிறகு அவர் கவிதை ஒன்று கைபேசியில் வர, வாசித்து வாழ்த்தியதும், கூடவே என் ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினேன்.
‘உங்க விலாசம் அனுப்புங்க.. புத்தகம் அனுப்பறேன்’
இதுதான் கமருதீன்.
வளர்த்தல் இல்லை. சுணக்கம் இல்லை. நேரடி த்வனி.
அவர் கவிதைகளும் அப்படியே.

தாத்தாவைப் புதைத்து விட்டுக்
குளித்த நதி
தொலைந்து போயிருந்தது
அம்மாவைப் புதைத்து விட்டுத்
திரும்பும்போது

(குங்குமம் இதழில் வைரமுத்து அவர்களிடம் தங்கம் வென்ற கவிதை)

குழந்தை
மரணித்த வீட்டின்
ஒரு மூலையில்
காயாமல் கிடந்தது
கடவுளின்
கண்ணீர்த் துளி !


ஒரு கவிதையிலோ
மழைத் தூறலிலோ
பூத்த பூக்களிலோ
பனித் துளிகளிலோ
எங்கு நுகர்ந்தாலும்
வரவேயில்லை
பச்சைக் குழந்தையின்
நறுமணம் !

கசக்குமா
இனிக்குமா
புளிக்குமா
துவர்க்குமா
கள்ளிப் பால்...
யாருக்குத் தெரியும்
இறந்து போன
பெண் குழந்தைகளைத் தவிர !

வாசிக்க வாசிக்க தமது எழுத்தால் கட்டிபோட்டு மிரட்டும் தஞ்சை கமருதீன்
தொகுப்பில் அத்தனை கவிதைகளையும் இப்படியே பதிவில் போட்டு விடுவதை விட நீங்கள் வாங்கி வாசிக்க..

தஞ்சை கமருதீன்
எண் 10/7 பாலா நகர்
ரெட்டிப்பாளையம் சாலை
தஞ்சாவூர் 613 004

கை பேசி 9940781914




July 12, 2011

நேசம்








சில விவாதங்களுக்குப் பின்
முகமற்று அலைகின்றன
நம் முந்தைய நேசங்கள்..
அவற்றின்
கழற்றி விடப்பட்ட
முகங்களைச்
சுமந்தபடியே
வெவ்வேறு திசைகளில்
நீயும் நானும்!


அத்தனை சொற்களையும்
பொட்டலமாய்க் கட்டி
எடுத்து வரும்போது
தடுக்கி விழுந்தேன்..
சிதறிப் பறந்தவைகள் போக
எஞ்சியதை
அள்ளிப் பார்த்தேன்..
ஒரு கவிதை
உயிர்த்திருந்தது.





நள்ளிரவில் எழுப்பி
வானக் கரும்பலகையில்
நேசம் எழுதிக் காட்டினாய்..
இப்போதெல்லாம்
என் நகங்கள்
விரல்களுக்கு உட்புறமாகவே
வளர்கின்றன..
கீறல்களுக்கு
துணை போக மறுத்து.




July 10, 2011

மூன்று







மற்றவர்கள் எழுதும் போது சுவாரசியமாய்த் தோன்றுகிற விஷயங்கள் என் கைக்கு வரும் போது ஏன் மிரட்டத் துவங்குகின்றன..?!

ஒரு மதிய குட்டித் தூக்கத்திற்குப் பின் (நல்ல வேளை.. மின்சாரம் இருந்ததால்) கணினி முன் உட்கார்ந்தால்.. சுந்தர்ஜி அழகாய் என்னை மாட்டி விட்டிருக்கிறார்.

மாதங்கியின் அருமையான.. நேரடி த்வனியில்.. படித்து ரசித்து விட்டு,
ஆர்.வி எஸ். அமர்க்களப்படுத்தியதில் பிரமித்து..

வேற வழி.. கள்ளத் தொண்டையில் ஒரு கச்சேரி பண்ணிர வேண்டியதுதான்.

1. விரும்பும் மூன்று விஷயங்கள் :-

பயணம். அதுவும் எனக்குப் பிடிச்சு.. மலைப் பிரதேசம்னா ரொம்ப ஹேப்பி..ரெயில் பெட்டர்.. கூட ஜமா சரியா அமைஞ்சுதுன்னா ஆஹா!

புத்தகங்கள். சில புக்ஸ் யாராச்சும் போற போக்குல சொல்லிட்டு போனது.. தேடி அலைஞ்சு வாங்கிப் படிச்சா.. சொர்க்கம் அதுதான்.

தனிமை. அப்பப்ப அப்படி ஒதுங்கி வாய், மனசு பேசறத நிறுத்தி வச்சு..
(பாவம் யாரு பெத்த புள்ளையோ.. கூப்பிட்டா கூட காதுல விழாம கண்ணுல தண்ணியோட என்னமோ மாதிரி ஒக்காந்திருக்கே)

2. விரும்பாத மூன்று விஷயங்கள் :-

புத்தகம் இரவல் கொடுப்பது. பல நல்ல புத்தகங்களை நம்பிக் கொடுத்து இழந்திருக்கிறேன். ‘ஜெய் சிவாஜி’ என்று ஒரு நாவல். குலோத்துங்கன் என்கிற புனைபெயரில் யோசாசன மாஸ்டர் சுந்தரம் எழுதியது. சத்ரபதி சிவாஜி பத்தி (யாராச்சும் படிச்சிருக்கீங்களா..)

அடுத்தவர் சொல்லாமல் நாமாய் துருவித் துருவி பர்சனல் மேட்டர் கேக்கறது.

என்ன கஷ்டம் வந்தாலும் புலம்பித் தீர்க்கறது.

3. பயப்படும் மூன்று விஷயங்கள் :-

என் கருத்தை அப்படியே சொல்லும் தைரியம் இன்னும் வரல. அப்படிச் சொல்லி முன்னால நிறைய அதிருப்தியை, நட்பின் இழப்பை சம்பாதித்த வலி.. அதனால சொல்லவும் முடியாம.. படற கஷ்டம்..

ஆத்மார்த்தமா கொஞ்ச பேர் போதும்னு தோணுது.. சுந்தர்ஜி மாதிரியே கூட்டம்னா அலர்ஜி.. கோவில் போனாக் கூட திருவிழா இல்லாம சாதா நாட்கள்ல போனாப் போதும்.. சமீபமா திருப்பதி போய் டேயப்பா.. என்னா கூட்டம்..

எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசா ஒரு பயம். இந்த தடவையாச்சும் சொதப்பாம ஒழுங்கா எழுதணும். ‘இன்னொரு தடவை பாடுங்கோ’ அப்படின்னு 100 வது தடவை கேட்டப்ப, ‘என் பாட்டுன்னா அவ்ளோ பிரியமா’ - ‘சே.. இப்பவாச்சும் ஒழுங்காப் பாடறீங்களான்னு பார்க்கத்தான்’ (அது மாதிரி ஆயிடக் கூடாது!)

4. புரியாத மூன்று விஷயங்கள் :-

நான் என்னதான் சரண்டர் ஆகி, விட்டுக் கொடுத்து, தழைஞ்சு போனாலும் மூஞ்சிய தூக்கி வச்சு குறை சொல்ற சிலர்.

சில பேரோட புதுக் கவிதைகள்!

என்னோட மனசு!

5. மேஜையில் உள்ள மூன்று பொருட்கள் :-

மானிட்டர்

மொபைல்

ஸ்பீக்கர்

6. சிரிக்க வைக்கும் மூன்று :-

எப்பவும் டாம் & ஜெர்ரி

’இன்னிக்கு முடிச்சிரலாம்’ என்று 10வது நாளாகச் சொல்லும் சக அலுவலர்.

கடவுளைத் திட்டுகிறவர்கள்

7. தற்போது செய்து கொண்டிருக்கும் மூன்று காரியங்கள் :-

பிடித்த பிற மொழிப் படங்களை டவுன் லோட் செய்து பார்ப்பது.

ஏதாச்சும் புதுமையா செய்ய மண்டையைக் காய்ச்சுவது..

அடுத்த சிறுகதைக்கு ஜன்னல் வழியே வெறிப்பது

8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று :-

உருப்படியாய் அதற்குள் வாழக் கற்றுக் கொண்டு விடுவது.

என்னை ஞாபகப் படுத்துகிற ஒரு படைப்பு எழுதுவது.

ஏதேனும் ஒரு வகையில் என்னைச் சுற்றியுள்ள/தேவை இருக்கிற மனிதருக்கு நிரந்தரமாய் பயன்படும் வகையில் ஒரு திட்டம்.

9. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள் :-

எதுவும் தெரியாது என்று ஒதுங்கிப் போய் பழக்கமில்லை. தெரியாததைத் தெரிந்து கொள்ள எப்போதும் முயற்சி உண்டு.. அப்புறம் அது கை வரலை என்றால்தான் சல்யூட்.

நான் பேசப் போனால் பகையாளிகள் சமாதானமாகி விடுவார்கள். (என்னுடன் மட்டும் பகையாகி விடுவார்கள் அதன் பின்)

சோர்ந்து போகிறவர்களைப் பேசித் தேற்றி எப்படியும் நம்பிக்கை ஊட்டி விடுவேன். (அப்புறம் அதே மாதிரி மேட்டர்ல நான் டல் ஆகி என் வார்த்தைகளே என்னைச் சுற்றி கும்மி அடிக்கும்போது, ஓ.. அதனால் தான் நேற்று அப்படி பேச வைத்ததா விதி என்று தெளிவேன்)

10. கேட்க விரும்பாத மூன்று :-

வம்பு.

வம்பு

வம்பு


11. கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று :-

இசை. மிருதங்கம் கற்றுக் கொள்ளப் போன என் நண்பனும் (அவர் மாரடைப்பில் மரணம் ) புல்லாங்குழல் கற்கப் போன நானும் (அவர் வீட்டை விட்டே ஓடி விட்டார்) இன்னொரு மாமியிடம் போய் ப்ளூட் வாசித்த போது (?) மாமி கீழே விழுந்து முதலில் ஆறு மாத ரெஸ்ட்.. அப்புறம் பர்மனண்ட் ரெஸ்ட்.. அந்த புல்லாங்குழலின் கடைசி மூச்சு எங்களால் (செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி என்கிற சொலவடை அப்பதான் எனக்கு அறிமுகம் மாமி மூலம் - அதாவது எங்க கையில் ப்ளூட்!

எழுத்து. உருப்படியா எழுதக் கத்துக்கணும். எத்தனை நாள் இப்படியே டகல்பாஜி வேலை பண்றது.

கணினி. சாமி சத்தியமா புரியல. ஏதோ கீபோர்ட் வாசிக்கிறேன் அதுல.


12. பிடித்த மூன்று உணவு :-

சீயாளம் : உச்சரிப்பு சரிதானா தெரியல. எங்கம்மா பண்ணுவா. பயத்தம்பருப்பில் ஊற வச்சு, கரகரன்னு அரைச்சு, வேக வச்சு, சின்னச் சின்ன பீஸா கட் பண்ணி ஒரு பக்கம் வச்சிருங்க. மல்லி, கடலைப்பருப்பு, மிளகாய் வாணலியில் வறுத்து பொடி செஞ்சு வச்சுக்கணும். மறுபடி வாணலியில் எண்ணை நிறைய விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சிவக்க வறுத்து புளித்தண்ணியை கெட்டியா விட்டு கட் பண்ண பயத்தம்பருப்பு பீஸையும் பொடியையும் போட்டு வதக்கணும். அவ்வளவுதான்.. (நார்த்ல டோக்ளா மாதிரியா)

பருப்பு ரசம் (அ) ஏதாவது ரசம் சாதம்.

பால்மாங்காய் : மன்னார்குடிப் பக்கம் காரப்பங்காடு என்று ஒரு கிராமம். அங்கே வரதராஜன், பெருந்தேவி. அவுங்க வீட்டு (அட.. கோவில் தான்) மடப்பள்ளியில வைகாசி விசாகத்துக்கு (நம்மாழ்வார் திருநட்சத்திரம்) பால் மாங்காய் கண்டருளப் பண்ணுவார்கள். (நைவேத்தியம்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் :-

காதில் வந்து விழும் பாடலை அன்று முழுக்க முணுமுணுக்கிற ரகம்தான் நானும்.

அமைதியான நதியினிலே ஓடம்.

ஜெய் ஜெய் ராதா ரமண ஹரி போல்.. ( ஆர்ட் ஆப் லிவிங் - சுதர்சனக் க்ரியா நிறைவுப் பாடல்)

பி சுசீலா பாடல்களில் ஏதாவது.


14. பிடித்த மூன்று படங்கள் :-


நவராத்திரி.

மொழி

சங்கராபரணம்

(ஸாரி.. இது வடி கட்டின பொய். நிறைய படங்கள் பிடிக்கும். மூன்று என்று சொன்னதால் வேறு வழியின்றி அவசரமாய் யோசிக்காமல் டைப் பண்ணது)

15. இது இல்லாமல் வாழ முடியாதென்று :-

மூச்சு !

உணவு!

உடை!


16 . இதை எழுத :-


ஆரண்யநிவாஸ்

எல்லென்

பத்மா (காகித ஓடம் - என்ன ஆச்சு? எங்கே போயிட்டீங்க)











July 09, 2011

காத்திருத்தல்


எதற்காகவேனும்
யாருக்காகவேனும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது..
ஆளற்ற வீட்டில்
பூட்டிய உட்பக்க அறைக்குள்
அழைப்பின் மணி ஒலிக்காக..
கைபேசியின் சிணுங்கலுக்காக..
குறைந்த பட்ச குறுஞ்செய்திக்காக..
தபால்காரர் வரவிற்காக..
எதிர் வீட்டு குழந்தைக்காக..

மகனோ.. மகளோ
தொலைதூரத்தில்..
மனைவிக்கு என்ன அவசரமோ
விட்டுப் பிரிந்து செல்ல..

யாருமற்ற தனியனாய்
உட்பக்கம் பூட்டிய அறைக்குள்..

காத்திருக்கும் மனசு..
ஏதேனும் ஒரு ஒலிக்காக..

அது யமனின் காலடி ஓசையெனினும்.



July 03, 2011

சூச்சு மாரி





வினோதமான சப்தம் தெருவில் கேட்டால் உடனே யூகித்து விடலாம்.
மாரி போய்க் கொண்டிருக்கிறான் என்று.

என்னை விட வயதில் பெரியவன். நிச்சயமாய் அவனை ‘அவன்’ என்று சொல்லக் கூடாது.

என் சிறு வயதில் இருந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் தெருவின் பிரதான அடையாளம் ‘செங்கமா முனீஸ்வரர் கோவில்’
செங்கண்மால் ஈஸ்வரன் தான் ‘செங்கமா’ ஆகிவிட்டது என்று என் கணிப்பு.

கோவில் முன்பு கொஞ்சம் பயம் கொஞ்சம் பக்திக்கு சொந்தமாய் இருந்தது. இரவு வேளைகளில் வீட்டின் பின் புறம் போகப் பயப்படுவோம்.
90 அடி நீளம் உள்ள வீடுகள் தான் தெருவில். அதன் பின் வீடு சைசுக்கு வெற்றிடம்.

கிணறு.. தோட்டம்.. கடைக் கோடியில் கழிப்பறை. இருட்டுவதற்குள் சுச்சா.. கக்கா வேலைகள் எல்லாம் முடித்துக் கொண்டு விட வேண்டும். பன்றிகள் ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த காலம்.

கழிப்பறைக்குப் பின்னால் ஆறடிச் சந்து என்கிற பெயரில் பொதுச் சாக்கடைப் பிரதேசம் மதிலை ஒட்டி.

ஸ்ரீரங்கம் சுற்று மதில்களால் சூழப்பட்ட பிரதேசம். சுஜாதா ஒரு கதையில் சொல்லி இருப்பார். ஏதாவது ஒரு வீட்டு மாடியில் ஏறினால் போதும். தாவித்தாவி கடைசி வீடு வரை அந்தரத்திலேயே பயணம் செய்யலாம்!

இந்த மதிலில் தான் முனீஸ்வரர் இரவு வேளையில் பவனி வருவதாய் ஒரு தகவல் எல்லா அம்மாக்களாலும் பரப்பப்பட்டு முரட்டுப் பிள்ளைகளை வழிக்குக் கொண்டு வரும் உபாயமாய் இருந்தது.

அந்த நாட்களில் அறிமுகமான இன்னொரு பயம் ‘மாரி’

வாய் கொள்ளாத பற்கள் துருத்திக் கொண்டிருந்த அவனைக் காட்டி மிரட்டுவார்கள். படிக்கிற காலத்தில் அறிமுகமான அவனைப் பல வருடங்கள் கழித்து பார்த்தபோது சொந்த வீடு வாங்கி அதே பகுதியில் வந்தபோது பெரிதாய் வளர்ந்திருந்தான். இப்போதும் பயமுறுத்துகிற மாதிரி.

அடுத்த வீட்டுப் பெண்மணியை பால் கேனுடன் சைக்கிளில் அனாயசமாய் டபுள்ஸ் அடித்துப் போகும் அழகிலாகட்டும்.. தெருப் பையன்களின் கலாட்டாவிற்கு அடி பணிந்து அவர்கள் மகிழ்ச்சியைக் கூட்டுவதிலாகட்டும்.. மாரி ஒரு சூப்பர் பிகர்.

இந்தத் தெருவில் அவதானித்தபோது தெரிய வந்த விஷயம் வீட்டிற்கு ஒருவராவது மன வளர்ச்சி குன்றியவர்களாய் இருப்பது. அதாவது மாரியைப் போலவே.

யாருடைய சாபம்.. அல்லது ஏன் இப்படி இந்தத் தெருவிற்கு மட்டும்.. புரியவில்லை.

ஸ்ரீரங்கம் நிறைய கதைகளுடன் எழுதுபவருக்காகக் காத்திருக்கிறது.. இன்னொரு சுஜாதா வந்தால்தான் பூர்த்தி ஆகும் போல!