October 13, 2009

நம்ம ஊரு நல்ல ஊரு

திருவரங்கம் ஒரு பார்வை

முன்னாடி மதில் காவிரி சோலைகள்.. இப்ப ப்ளாட்ஸ்.. அதெல்லாம் சரி. ஊருக்குள்ள வந்தாலே ஒரு நிம்மதி ஃபீல் பண்றீங்களான்னு கேட்டா நூத்துக்கு 99 பேர் யெஸ்னு சொல்வாங்க.

என்ன பியூட்டின்னா முன்னை விட இப்பல்லாம் நிறைய தொந்திரவுகள். பர்ஸ்ட் கொசு.. கொசுப்படைன்னே சொல்லலாம்.

மருந்து அடிக்க கார்ப்பரேஷனுக்கு மறதி. ஆனா மறக்காம இனவிருத்தி பண்ற கொசு!

கதவை எல்லாம் மூடி வச்சாக்கூட ஹேங்கர்ல தொங்கற சட்டையை ஆட்டினா 100 கொசு பறக்கும்.

அப்புறம் மழையே இல்லை!

காவிரிக்கு அந்தப் பக்கம் அடிக்கற மழை கூட இந்தப் பக்கம் சொட்டு சொட்டா தெளிச்சுட்டு போவுது. வருஷத்துல 6 மாசம் வெய்யில். மீதி 6 மாசம் கடுமையான வெய்யில்.

கந்தக பூமிடா இதுன்னு எதிர் வீட்டு பாட்டி சொல்றப்ப 'ஆன்னு' வாயைத் திறந்துகிட்டு கேட்டது ஞாபகம் வருது.

அதுக்காக பன்மாடிக் குடியிருப்புகள் விற்பனை குறையுதான்னா 'நோ'

பூமி பூஜை போடறப்பவே எல்லா வீடும் புக் ஆயிருது.

லிப்ட் இருக்கா.. கார் பார்க்கிங்க் இருக்கா.. ஹாஸ்பிடல் வசதி பக்கத்துல இருக்கானு வயசான கூட்டம் ஒண்ணு வந்து செட்டில் ஆயிருக்கு.

வருஷம் முழுக்க ரெங்கா (ஸ்ரீரெங்கநாதர் தான்) ஸ்ரீரங்கம் முழுக்க கவர் பண்ணிடறார். அத்தனை பேரும் அவர் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி தெருவுல போகறதைப் பார்த்தா ஸம்திங்க் இருக்குன்னு தோணுது.

கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்!

ஸோ கால்டு கழகக் கண்மணிகள்!

டாக்டர் அட்வைஸ். டிராபிக் ரோட்டுல போனா அடிபட்டுக்குவோம்னு பயமோ.. இல்ல.. பொல்யூஷன் பிரச்னையோ.. சித்திரை வீதி.. உத்திரை வீதில ஜாம் ஜாம்னு நடக்கலாம்.

வாக்கிங்க் ப்ளஸ் புண்ணியம்னு ஆத்திகக் கூட்டம் கணக்கு போடற மாதிரி நாத்திகக் கூட்டமும் நாசூக்கா நடக்குது.

மழையே வராதுன்னு கார்ப்பரேஷன் முடிவு கட்டிட்ட மாதிரி தெருவுல மண்ணே இல்லாம காங்கிரீட் ரோடு போட்டாச்சு.

மழை நீர் சேகரிப்புன்னு கண்டு பிடிச்ச நல்ல விஷயத்தையும் ஊத்தி மூடியாச்சு.

திடீர்னு ஏதோ ஒரு பேர்ல கூண்டு வச்சு செடி வளர்த்து மரமாக்கி அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வெட்டிப் போடற வித்தை மனுஷங்களுக்குத்தான் சாத்தியம்.

வீதிகள்ல இந்தக் கொடுமை அரங்கேறினதைப் பார்க்கறப்ப 'வளர்ப்பானேன்.. வெட்டுவானேன்னு' தோணும்.

இவ்வளவும் மீறி எப்பவோ தீர்மானிச்ச சட்ட திட்டங்கள் ஸ்ரீரங்கத்தைக் காப்பாத்துது இன்னமும்னு நினைக்கறப்ப (அதுக்கும் அப்பப்ப சவால் வருது) ஒரு பெருமூச்சு ரிலீஸ் ஆகறதைத் தடுக்க முடியல.

அப்படின்னா ஸ்ரீரங்கம் பத்தி நல்ல விஷயமே இல்லியான்னு நினைச்சிராதீங்க. நான் சொல்ற இந்த கம்ப்ளெயிண்ட்ஸ் எல்லா ஊருக்கும் பொதுதானே!

அப்பப்ப ஸ்ரீரங்கம் பத்தி பேசுவோம்...

6 comments:

கே. பி. ஜனா... said...

உஸ்ஸ் அப்பாடா... (விசிறிக் கொண்டே) என்ன சார், அப்படி என்ன வெயில் சார் அங்கே.. ஒரு நாப்பத்தஞ்சு இருக்குமா? - கே.பி.ஜனா

Rekha raghavan said...

//கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்//

நல்லா சொன்னீங்க. அருமையான பதிவு.

ரேகா ராகவன்

CS. Mohan Kumar said...

நல்ல சுவாரஸ்யமான நடை. நான் பார்த்த ஸ்ரீரங்கத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

நான் ஏழு வருடம் திருச்சியில் படித்தேன். (தற்போது சென்னை வாசம்).பல முறை ஸ்ரீரங்கம் வந்துள்ளேன். ஸ்ரீரங்கம் எனக்கு மிக பிடிக்கும். ரெங்கன் ஒரு காரணம். எனக்கு மிக பிடித்த எழுத்தாளாரான சுஜாதா பிறந்து வளர்ந்த ஊர், அவர் மிக அதிகம் எழுதிய ஊர். இவற்றாலும் பிடிக்கும்.

ஸ்ரீரங்கம் முதல் முறை பள்ளியில் படிக்கும் போது அக்கா friend திருமணத்துக்காக வந்தேன். சுஜாதா நடந்த மண் என்ற எண்ணத்தில் முதல் மரியாதையை போல் மெய் சிலிர்த்தது.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com

ரிஷபன் said...

நன்றி மோகன்குமார் ஸ்ரீரங்கம் பக்கம் வந்தா சொல்லுங்க

Sathya003 said...

Miga arumai :)

ஹ ர ணி said...

பதிவு படித்ததும் மனசுக்குள் ஒரு காவிரி புரள்கிறது. இழைவாகப போகிறது படிக்க மனசுக்குள். வாழ்த்துக்கள். சீரங்கம் மனதுக்குள் பள்ளிக்கொள்கிறது. ஹரணி