December 09, 2011

தீபம்


இருளிலிருந்து ஒளிக்குச் செல்லவே

பிரியப்படுகிறது புத்தியும் மனசும்.

கீற்றாய்த் தெரியும்

ஒளி தரும் நம்பிக்கை

பாதையைக் கடக்கச் செய்து விடுகிறது

ஒரு நொடியில்..

சில வார்த்தைகளும்

சில நேரங்களில்

ஒளிச் சுழற்றலாய்..

ஒளிதான் நம்பிக்கை..

நம்பிக்கையே ஒளியாய்..

கார்த்திகை தீப நல் வாழ்த்துகள்.


24 comments:

நிலாமகள் said...

ஒளிதான் நம்பிக்கை..
:-)

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்... தீபத்தின் ஒளி எங்கும் பரவட்டும்...

Yaathoramani.blogspot.com said...

கார்த்திகைத் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
த.ம 2

சென்னை பித்தன் said...

நம்பிக்கையே வாழ்க்கை.
கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்.

ஷைலஜா said...

கவிதையே தீபமாய் ஒளிர்கிறதே!

மகேந்திரன் said...

நம்பிக்கையின் ஒளியில் நற்பாதை கண்டு
செவ்வழி செல்வோம்...

கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Sharmmi Jeganmogan said...

உங்களுக்கும் அது உரித்தாகட்டும் நண்பரே..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட...கவித!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

ஒளிதரும் கார்த்திகை தீபம் மனங்களில் நம்பிக்கை ஒளியை விதைக்கட்டும். அழகான வரிகளில் க‌விதை தந்த உங்களுக்கும் என் மனமார்ந்த கார்த்திகை தீப வாழ்த்துக்கள்!

Unknown said...

Very Nice boss!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 8

தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
தீபமாய் ஒளிரும் கவிதை.
ஒளி தான் நம்பிக்கை என்ற பாதையை நமக்குக்காட்டுது! vgk

KParthasarathi said...

நன்றாக உள்ளது
இந்த நன்னாளில் வாழ்த்துகள்

ADHI VENKAT said...

//ஒளிதான் நம்பிக்கை..

நம்பிக்கையே ஒளியாய்//

தீப ஒளி பரவி நன்மை செய்யட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

ஒளிதான் நம்பிக்கை..

நம்பிக்கையே ஒளியாய்..

கார்த்திகை தீப நல் வாழ்த்துகள்.

Unknown said...

நம்பிக்கை என்ற ஒளியே
மனிதனுக்கு வாழ்க்கையில்
நம்பி கை கொடுக்கும்!
இக்கவிதையும் அதைக் கொடுக்கும்!

புலவர் சா இராமாநுசம்

துரைடேனியல் said...

Vaalthukkal.
TM 10.

SATYA LAKSHMI said...

Thanks for your wishes.

மாலதி said...

நம்பிக்கை..வாழ்த்துகள்.....

G.M Balasubramaniam said...

// நம்பிக்கையே ஒளியாய்.// wELL SAID. .

ஹ ர ணி said...

இருளில்தான் நமது ஜனனம் நிகழ்ந்தது. என்றாலும் அது வெளிச்சப் பயணத்தின் தொடக்கமாகவே வெளியேறியது. ஒளி நம்பிக்கை மட்டுமல்ல நமது வாழ்வு. எளிமையும் அழகும் நிரம்பிய கவிதை. உங்களுக்கும எனது வாழ்த்துக்கள்.

arasan said...

நம்பிக்கை கூறும் வரிகள் ..
நச்சென்று இருக்கு கவிதை ..
வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

ஆம் .ஒளி தான் நம்பிக்கை.
நம்பிக்கை ஒளி.
நல்ல கவிதை

vetha (kovaikkavi) said...

நம்பிக்கை ஒளழக் கவிதை வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com