November 25, 2010

எனக்காக



பொருத்திப் பார்த்ததில்

ஒரு முகம் மட்டும்

எனக்கானதாய் ....

அது

இப்போதைய

என் முகமே!



ஒவ்வொருவராய்

நிராகரித்துப் போனதும்

தனித்து விடப் பட்டேன்..

என் நினைவுகளுடன்.



பாதங்களின் மீதான

கவனம்

வெடிக்கும் போதுதான்

நேர்கிறது ...

உணர்வுகளிலும் அப்படியே ..



ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது.



19 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//ஒவ்வொருவராய் நிராகரித்துப் போனதும் தனித்து விடப் பட்டேன்..என் நினைவுகளுடன்.//

மிக உருக்கமான கவிதை ரிஷபன் அந்தப் பிஞ்சின் முகம் போலவே.

vasu balaji said...

இரண்டும் நாலும் சொல்லுக்குறுதி:). ஒன்னும் மூணும் மட்டும் சோடையா என்ன?

வெங்கட் நாகராஜ் said...

பிஞ்சுப் பையனின் புகைப்படமும் கவிதைகளும் அருமை.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது//

அருமை.

அன்பரசன் said...

//அது

இப்போதைய

என் முகமே!//

நல்லா இருக்குங்க.

vasan said...

/ஒற்றையடிப் பாதை
உருவாகிறது
முதல் காலடி
படும் போது./

ஒற்றையடிப் பாதை உருவாகிறது
ஒற்றையாளாய் போகும் போதும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிஞ்சு முகத்தின் படமும், கவிதையும் மனதை உலுக்குவதாக உள்ளது.

Chitra said...

ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது.


.....அருமையாக எழுதி இருக்கீங்க....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..
கவிதை அருமை..
படமும் அருமை.....

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு ரிஷபன்

ADHI VENKAT said...

அருமையான கவிதை.

ஹ ர ணி said...

ரிஷபன்..

பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்
அப்படியே..

உணர்வின் அணுக்கள்தோறம் அதிரவைக்கும்
வரிகள். உங்கள் கவிதைகளை அதிகபட்சம் நான் படித்திருந்தாலும் இந்த வரிகள் காலத்திற்கும் என்னை அசைப்பவை. மேற்கண்ட வரிகளைக் கொண்டு மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரையே எழுதலாம் கவிதைகயின் மீதான வேறு பார்வை குறித்து.

வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது//
'சுரீர்' என்றொரு படமும் நறுக்குத் தெறித்த கவிதை வரிகளும் !

நிலாமகள் said...

பாதங்களின் மீதான கவனம் வெடிக்கும்
போதுதான் நேர்கிறது...உணர்வுகளிலும்
அப்படியே..

வரிகளில் சிக்கிச் சுழலுகிறது மனசு.

குட்டிப்பையா|Kutipaiya said...

//ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது.//

அருமை..மிக உண்மையும் கூட..

பத்மா said...

கவிதை !

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஒற்றையடிப் பாதை
உருவாகிறது

முதல் காலடி

படும் போது.

அருமை

Aathira mullai said...

//ஒற்றையடிப் பாதை

உருவாகிறது

முதல் காலடி

படும் போது//

தேர்ந்த கற்பனை.

பனித்துளி சங்கர் said...

//////பாதங்களின் மீதான
கவனம்
வெடிக்கும் போதுதான்
நேர்கிறது ...
உணர்வுகளிலும் அப்படியே ../////


அசத்தல் நண்பா வார்த்தைகளில் வலி ஏற்படுத்த எல்லோராலும் இயலாது . உணர்வுகளின் உச்சங்களில் தெறிக்கிறது கவிதையின் வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி