January 02, 2010

உன் வருகைக்காக

எப்போதும் போல
உன் வருகைக்காக காத்திருக்கிறது
என் மன பிரபஞ்சம்..
நீ வந்து விட்டுப் போன பிறகே
நான் வர நேர்கிறது
ஒவ்வொரு முறையும்..
ஆனாலும்
உன் அன்பின் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதில்
என்றும் பின் வாங்கியதில்லை
என் மன நிலா!
எட்டிப் பிடிக்கும் என் உயரங்கள்
எல்லாமே உனக்காக ..
உன்னைச் சுமந்துதான்..
காதலின் பிடியில் வீழ்ந்த பிறகே
சிகரமாய் எழுந்தேன்..
என் தடம் பதித்த வெற்றி சுவடுகளுடன்..
ஆனாலும் இப்போதும் இனிக்கிறது முதன்மையாய்
என் சாதனைகளுக்கான
எத்தனையோ பரிசுகளில்
நீ கொடுத்த
அந்த
முதல் முத்தம் . . .

7 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படிப்பவரை இழுத்து அணைத்துக்
கட்டிக்கொள்ளும் 'பசை'யான வரிகளைக்
கொண்ட கவிதை இது!

வசந்தமுல்லை said...

GREAT!!!!!!!!!!!!!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

என் மன நிலா!
எட்டிப் பிடிக்கும் என் உயரங்கள்
எல்லாமே உனக்காக ..//

நைஸ்...!

Paleo God said...

காதலின் பிடியில் வீழ்ந்த பிறகே
சிகரமாய் எழுந்தேன்
என் தடம் பதித்த வெற்றி சுவடுகளுடன்..
ஆனாலும் இப்போதும் இனிக்கிறது முதன்மையாய் என் சாதனைகளுக்கான எத்தனையோ பரிசுகளில்
நீ கொடுத்த அந்த முதல் முத்தம் .//

தேன் தேன்,,ரசித்தேன் ...:))

Thenammai Lakshmanan said...

//எப்போதும் போல

உன் வருகைக்காக காத்திருக்கிறது
என் மன பிரபஞ்சம்..
நீ வந்து விட்டுப் போன பிறகே
நான் வர நேர்கிறது
ஒவ்வொரு முறையும்//

ரொம்ப அருமை ரிஷபன்
அட்டகாசமா இருக்கு

ம்ம்ம் ...கலக்குங்க

ஹேமா said...

புது வருஷம் முத்தத்தோட ஆரம்பமா !அசத்தல்தான்.

இனிய புது வருட வாழ்த்துக்கள் ரிஷபன்.

கதம்ப உணர்வுகள் said...

ரசித்து எழுதப்பட்ட ரசனையாளனின் அற்புதமான கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது....

தனக்கு கிடைத்த நல்லவை எல்லாவற்றிற்குமே காரணமாக தன் உழைப்பை, முயற்சியை சொல்லாமல் அன்பு பகிர்ந்த நெஞ்சத்தை கைக்காட்டி செல்கிறது கவிதை வரிகள் அழகாய்...

எதிர்ப்பாராது பெய்யும் மழையும்...
எதிர்ப்பாராது கிடைக்கும் ஸ்வாமி தரிசனமும்....
எதிர்ப்பாராது வீசிய தென்றல் காற்றும்...
எதிர்ப்பாராது கிடைக்கும் அன்பும்...

ரசிக்கவைப்பவை....

சிந்தனை வரிகளில் மனதின் அன்பும் கலந்து உணர்வுகளில் பிணைந்து எழுதப்பட்ட கவிதை வரிகள் என்பதால் ரசிக்கவும் வைக்கிறது....

உவமைகள் மிக அட்டகாசமாய் சிறப்பாய்....

வருகைக்காக காத்திருப்பில் ஆரம்பித்து வந்து சொந்தம் கொண்டாடி மகிழ்ந்த தருணங்களில் பகிரக்காத்திருந்த அன்பை சென்றப்பின்னரும் சுவடுகள் தடம் பதித்ததை அறியமுடிகிறது...

வெற்றிகளும் சாதனைகளும் கூட அந்த நிமிட சந்தோஷம் மட்டுமே என்றும்... அந்த வெற்றியைக்கொண்டாட கிடைத்த பரிசுகளில் கிடைத்த மிக உன்னதமான பரிசு மட்டும் மனதை விட்டு அகலாது நிலைத்திருப்பதை கவிதை வரிகள் சொல்லிய விதம் மிக அழகு ரிஷபா...

ப்பா பிள்ளை என்னமா எழுதுது கவிதை வரிகள் எல்லாம் ரசிகனின் சிந்தனையில் விளைந்த முத்துகளாய்....பிரகாசிக்கிறதுப்பா....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரிஷபா அழகிய கவிதை பகிர்வுக்கு...