June 26, 2010

விண்ணைத் தொடுவோம்


பூமிக்குள்தான்

இத்தனை சண்டை ..

வானத்தைப்

பங்கிட்டு கொள்ளலாம் ..

அத்தனை பேருக்கும்

கொடுத்தபின்னும்

மிஞ்சும் வானம்!

பார்வை எட்டும் தூரம் வரை

அவரவர்க்கான வானம்

அவரவர் தலை மீதுதான்..

யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..

இனி தலை கவிழ்ந்து

பூமி பார்க்கும் இச்சை விட்டு

தலை நிமிர்ந்து

விண்ணைத் தொடும்

புத்தியில் நடப்போம் ..

22 comments:

க.பாலாசி said...

//தலை நிமிர்ந்து
விண்ணைத் தொடும்
புத்தியில் நடப்போம் ..//

நம்பிக்கையுடன்...

நல்ல கவிதைங்க ரிஷபன்...

Rekha raghavan said...

// பார்வை எட்டும் தூரம் வரை
அவரவர்க்கான வானம்
அவரவர் தலை மீதுதான்..
யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை//

சிந்திக்க வைக்கும் வரிகள். அருமையான கவிதை .

ரேகா ராகவன்.
(now at Chicago)

சிநேகிதன் அக்பர் said...

தலை நிமிர்ந்து நடப்போம். அருமை பாஸ்.

அம்பிகா said...

\\அவரவர்க்கான வானம்


அவரவர் தலை மீதுதான்..


யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..\\
அழகான வரிகள்.

வசந்தமுல்லை said...

அத்தனை பேருக்கும்

கொடுத்தபின்னும்

மிஞ்சும் வானம்!

பார்வை எட்டும் தூரம் வரை

அவரவர்க்கான வானம்

அவரவர் தலை மீதுதான்..

யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை.
என்ன சத்தியமான வார்த்தை !!!!!!!!!!!!!

vasu balaji said...

mm. ஆஹா

Madumitha said...

வானம் தொட்ட பின்
பூமி அழகாய்டுமோ?

Chitra said...

அவரவர்க்கான வானம்

அவரவர் தலை மீதுதான்..

யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை..

.... :-)

ஹேமா said...

கவிதை சிந்தனை அழகாயிருக்கு ரிஷபன்.ஆனா இந்த மனுஷங்க பூமியில இருந்தபடியே வானத்தை நோண்டி வைக்கிறாங்க.அங்கேயே குடியிருக்க விட்டா பூமியின் அழகைக் கெடுத்தமாதிரி அங்கேயும் !

பத்மா said...

அந்த மிஞ்சுற வானில் எனக்கும் கொஞ்சம் ...
புத்தியில் நடப்போம்....... நல்ல பிரயோகம்

மதுரை சரவணன் said...

அருமை.வாழ்த்துக்கள்

துரோகி said...

நல்லா யோசிக்கிறீங்க! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விண்ணை
மட்டும்,
பார்த்து,
நடந்தால்,
விழுந்து விட
மாட்டோமா,
கார்ப்பரேஷன் குழிகளில்!!!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அழகு!

vasan said...

ரிஷ‌ப‌ன்,
(மாயாவ‌திக்கு ப‌ட்டா போட்ட‌து
ச‌ந்திர‌ன்ல‌ ம‌ட்டுந்தானே?)
அப்ப‌ச் ச‌ரி.
நான் நிமிர்ந்து பார்த்தால்,
வானில்,
யாரே விட்ட‌ சாட்டிலைட்டு,
'எண்ணை' தேடியா? இல்லை.
இட‌ம் தேடும் என்னைத் தேடியா?

க ரா said...

நல்ல தன்னம்பிக்கை கவிதை ரிஷபன்.
நேரம் கிடைச்சா நம்ம கடைக்கும் வந்துட்டு போங்க.
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html

கே. பி. ஜனா... said...

'ஆம் நடப்போம்!' என்று ஆமோதிக்க வைக்கிற கவிதை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லோரையும் தலை நிமிர்ந்து நிற்க வைத்து விட்டீர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையானதொரு படைப்பு. பாராட்டுக்கள்

பனித்துளி சங்கர் said...

////பூமி பார்க்கும் இச்சை விட்டு
தலை நிமிர்ந்து
விண்ணைத் தொடும்
புத்தியில் நடப்போம் ..////


இதுவும் சரிதான் நண்பரே அருமையான சிந்தனை பகிர்வுக்கு நன்றி

Thenammai Lakshmanan said...

அவரவர்க்கான வானம்


அவரவர் தலை மீதுதான்..


யாரும் பறித்துக் கொள்ளப் போவதில்லை//

அட அருமை பாஸ்..