May 23, 2012

வாழ்க்கை






நீருக்குள்
மூச்சு திணறிய
மீனாகி விட்டதென்
வாழ்க்கை.
காற்றில்லா நேரம்
பறக்க முயன்றேன்..
கவலைகளை
தலையணை உறைக்குள்
அடைத்து வைத்து
உறங்கிப் போன
என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...










20 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

/கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது/

சிந்திக்க வைக்கின்றன வரிகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...//

அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பிடித்த வரிகளை சொல்லலாம் என்று நினைத்தால், கவிதையின் அத்தனை வரிகளுமே என்னை இழுத்தணைத்து கட்டிக் கொண்டு விட்டது!

arasan said...

நறுக்கென்ற ஒரு படைப்பு .. வாழ்த்துக்கள்

மாலதி said...

என் புத்திக்கு
புரியவில்லை ...
கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...//

மிகச் சிறந்த ஆக்கம் மாறுபட்ட கோணம்

இராஜராஜேஸ்வரி said...

கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ..
"வாழ்க்கை" !!!!!!!

பால கணேஷ் said...

மனதில் ஒட்டிக் கொண்டது கவிதை. அருமை.

கே. பி. ஜனா... said...

ஏற்ற வார்த்தைகள் என்ன அமரிக்கையாக சொல்லிவிட்டன இதய ஓட்டத்தை!

சாந்தி மாரியப்பன் said...

//கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில்//

அருமையான வரிகள்..

கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு என்னத்தைக் கற்றுக்கொடுத்து விட முடியும்?..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை. அருமை.

ஸ்ரீராம். said...

கவலைகளைத் தலையணை உறைக்குள் அடைக்கும் வரிகளும், நீருக்குள் மூச்சுத் திணறும் மீனும், கற்றுத் தர ஏதுமில்லா பிரபஞ்சமும்,...அருமை.

dlakshmibaskaran said...

சாதகமான சூழலைத் தவறவிட்ட ஒரு மனத்தின் அங்கலாய்ப்பை அணி செய்கிறது, ஒவ்வொரு உதாரணமும்..!நீருக்குள் மூச்சுத் திணறும் மீன், கால்களை கட்டிக்கொண்டு பந்தயத்திற்கு பெயர்கொடுக்கும் நிலை.. ரசிக்க வைக்கிறது..!

Rekha raghavan said...

அருமை.

வசந்தமுல்லை said...

மயிலப் பிடிச்சு காலை ஒடைச்சி ஆட சொல்கிற உலகம் போல்
உங்கள் கவிதையும் ஒரு அழகான கவிதை ஓவியம்!

கீதமஞ்சரி said...

வாழ்க்கையின் சூட்சுமத்தை அழகாய் விளக்கிச்சொல்லிவிடுகின்றன கவிதைக்குள் பொதிந்திருக்கும் உவமான உவமேயங்கள். மனம் தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ரிஷபன் சார்.

Unknown said...

கண்ணைக் கட்டிவிட்டு நட என்றால்
முயன்றாவது பார்கலாம்.
காலைக் கட்டிவிட்டு ஓடு என்றால்
என்ன செய்வது?

கவிதை அருமை!

Matangi Mawley said...

Beautiful!!

இராஜராஜேஸ்வரி said...

கால்களைக் கட்டிக் கொண்டு
பந்தயத்தில்
பெயர் கொடுத்தபோது
கற்று தர ஏதுமில்லை
இந்த பிரபஞ்சத்தில் ...

நிலாமகள் said...

க‌வ‌லைக‌ளைத் த‌லைய‌ணை உறைக்குள் அட‌க்கி வைத்தால் க‌ர‌டு முர‌டாக‌ உறுத்தி தூக்க‌த்தைக் கெடுக்காம‌லிருக்குமா.... வ‌ரிக‌ள் காட்டும் ப‌ரிமாண‌ங்க‌ள் வேறு வேறாய் ப‌ர‌ந்து விரிய‌... ஆழ்ந்த‌ ம‌று வாசிப்புக்குள் அமிழ்கிற‌து ம‌ன‌ம்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அவை வரிகள் இல்லை....வலிகள்...