December 13, 2009

உனக்கு மட்டுமே சாத்தியம்

நீ இல்லாத நேரங்களில்
.உன் நினைவுகளைவிட்டுச் செல்கிறாய்..
அவை உன்னைப் போலவேமோசமடி..
என்னை ஏய்ப்பதில்.
கனவுகளில் நீ வராததால்
என் தூக்கத்திற்குவிடுமுறை
அளித்திருக்கிறேன்..
அதெப்படி சாத்தியமாகிறது
பூக்களே இல்லாமல்அதன்
வாசனை மட்டும்
என்னை சுற்றிஎப்போதும் சுழல்கிறது..
உன்னைத்தான் 'பூ' என்றேன்..
இத்தனை மெல்லிய விரல்களாஉனக்கு..
செல்லமாய் என்னை அடிக்கும்போதுதான்
அதை உணர்ந்தேன்..
அதுவே கோபத்தில் ஒற்றை விரலால்
நீ என்னைச் சுட்டுகையில்
விழாத அடி என்னமாய் வலிக்கிறது..
உன் பெயர் உச்சரிக்கும்போது
என் இதயம் எத்தனை விசாலமாகிறது..
காணாத நேரங்களில்
எனக்கான உலகம் சுருங்கிப் போகிறது..
நேரில் வாயடைத்து
நினைவுகளில் ஏங்க வைத்து
காத்திருக்கும் என்னை
கைப் பிடிக்க வா.. பெண்ணே!

8 comments:

Chitra said...

//காணாத நேரங்களில்
எனக்கான உலகம் சுருங்கிப் போகிறது..//
.........அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். நல்லா இருக்குங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

"உன் பெயர் உச்சரிக்கும்போது
என் இதயம் எத்தனை விசாலமாகிறது..
காணாத நேரங்களில்
எனக்கான உலகம் சுருங்கிப் போகிறது.."
என்ன ஒரு சத்யமான வார்த்தை!!

வசந்தமுல்லை said...

arumaiyana anubavam ullthu kavithaiyil. arumai.

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை வரிகள் மிகப்பிடித்திருக்கிறது நண்பா...வாழ்த்துக்கள்

வசந்தமுல்லை said...

அருமையான கவிதை.

என் நடை பாதையில்(ராம்) said...

அதுவே கோபத்தில் ஒற்றை விரலால்
நீ என்னைச் சுட்டுகையில்
விழாத அடி என்னமாய் வலிக்கிறது..

ஹேமா said...

காதல் உணர்வு மிக அனுபவித்து...!

Rekha raghavan said...

//கனவுகளில் நீ வராததால்
என் தூக்கத்திற்கு விடுமுறை
அளித்திருக்கிறேன்..//

நல்ல சிந்தனை. அருமையான கவிதை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்...