November 30, 2011

கொள்ளிடக் குளியல்


பல வருடங்களுக்கு முன் அந்த மூன்று நாட்கள் கழித்து வீட்டுப் பெண்கள் கொள்ளிடம்தான் குளிக்கப் போவார்கள். அதுவும் விடியற்காலை நாலரை.. ஐந்து மணி நேரத்தில்.

80.. 90 என்று வயதானவர்கள் கூட இன்னமும் காவிரி, கொள்ளிடம் என்றுதான் ரெகுலராகக் குளிக்கப் போகிறார்கள். அவர்கள் திடமாய் இருக்கிறார்கள் இப்போதும்.

நாச்சியார் பாட்டி 90 வயதிலும் கொள்ளிடம் போனார். தெருப் பெண்கள் பாட்டியிடம் தான் துணை தேடுவார்கள்.

இரவில் படுக்கப் போகுமுன் மறுநாள் புரொகிராம் சொல்லக் கூடாது என்று ஒரு நம்பிக்கை. 'பிழைத்துக் கிடந்தால்' (அ) 'பிச்சைக்காரம்' என்பார்கள்.

பிச்சைக்கும் மறுநாளுக்கும் என்ன சம்பந்தம் என்று முதலில் (இப்போதும்) புரியவில்லை. மறுநாள் உயிருடன் இருப்பதே அவன் போட்ட பிச்சை என்பதாலா?

இந்த சம்பவம் பிறர் சொல்லிக் கேட்டதுதான். இதை நிரூபிக்க நாச்சியார் பாட்டியும் இல்லை.

ஒரு முறை அடுத்த வீட்டுப் பெண் நாச்சியார் பாட்டியிடம் முதல் நாள் இரவு சொன்னாளாம்.

'பாட்டி.. நாளைக்கு என்னையும் கூட்டிண்டு போங்கோ'

பாட்டி சம்மதித்து இருக்கிறார். மறுநாள் விடியற்காலை பாட்டி எழுப்பியிருக்கிறார்.

"வரியா"

இவளும் பின்னாலேயே போனாள். கொள்ளிடம் வந்தாச்சு.

போகிற வழியில் வழக்கமாய்ப் பார்க்கிற பால்காரர், இதர இம்மாதிரி குளியல் பெண்கள் யாருமில்லை.

வெறிச்சோடிய கொள்ளிடம். துணிகளை அலசி குளிரில் முக்கி எழுந்து 'பாட்டி.. போலாமா'

ஹா. நாச்சியார் பாட்டியைக் காணோம்.

சொல்லாமல் போயிட்டாளா..

வேகம் வேகமாய் நடந்து வந்தால் வடக்கு வாசல்.. சித்திரை வீதி.. இதோ வீடு.. பாட்டியைக் காணோம்.

இவள் சரியாக வீட்டு வாசலில் வந்து ஈரத் துணிகளுடன் நிற்க.. நாச்சியார் பாட்டி மெதுவாய் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து " என்னடி.. என்னை அழச்சிண்டு போச்சொல்லிட்டு நீ போய் குளிச்சுட்டு வந்துட்ட' என்றார் நிதானமாய்.

பா..பாட்டி.. அப்ப அது நீங்க இல்லியா.. தொப்பென்று கீழே விழுந்தவளை அள்ளிக் கொண்டு வீட்டிற்குள் போனார்கள். ஒருவாரம் காய்ச்சலில் கிடந்து பிழைத்தாளாம்.

த்ரில்லர் கதைகள் இப்படித்தான் எங்களுக்கு அறிமுகமானது. நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் சில விஷயங்களை செய்ய பழக்கி விட்டார்கள்.

இப்போது கொள்ளிடம் போக வெளிச்சம் வரவேண்டும்.

அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் வந்திருக்கிறார்கள்.. பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.



22 comments:

rajamelaiyur said...

நல்ல அனுபவம்

iniyavan said...

சார்,

சிறு வயதில் எனக்கும் இந்த கதை சொல்லப்பட்டது. இன்று வரை நான் பலோ செய்கிறேன்.

ADHI VENKAT said...

தினமும் ”ஸ்ரீரங்கத்து கதைகள்”.....ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில்.

த்ரில்லர் கதை ...பாட்டியை நினைத்தாலே பயமாயிருக்கு சார்.

நிச்சயம் தூங்குவதற்கு முன் விபூதி வைத்துக் கொண்டு தான் படுப்பேன்.

Rekha raghavan said...

படித்து முடித்ததும் வியர்வையில் குளித்திருந்தேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 3 இண்ட்லி 4 யூடான்ஸ் 4

நல்ல திகில் கதை தான், கொள்ளிடத்தில் குளித்தது போல வியர்வை வந்திடும் படித்ததும் சிலருக்காவது. vgk

துரைடேனியல் said...

Sugamana anupavam.
TM 4.

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சுவரஸ்யமான கதை
பதிவாக்கித் த்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 5

ஹேமா said...

”பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரம்”
முதியவர் சொல் அர்த்தம் மிகுந்தது !

கீதமஞ்சரி said...

அட, நானும் கேட்ட கதைதான் இது. ஆட்களும், ஊரும் மாற்றம். அதிகாலை (?) அழைப்பு மட்டும் நிரந்தரம் போலும். படிக்கும்போதே கொள்ளிடக் கரையில் தனித்திருப்பதுபோல் திகில் அப்பிக் கொள்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

நாளைக்கு என்று சொல்லாமல் இப்போதே என்று மறைமுகமாய் சில விஷயங்களை செய்ய பழக்கி விட்டார்கள்.

அருமையான பழக்கம்..

இராஜராஜேஸ்வரி said...

அந்த நாள் பெண்கள் என்ன துணிச்சலாய் இருட்டில் போய் வந்திருக்கிறார்கள்.. பிரமிப்பாய்த்தான் இருக்கிறது.


கொள்ளிடத்தில் குளித்த மலரும் நினைவுகள் .....

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

அட இந்த த்ரில்லர் நல்லா இருக்கு! இப்ப கொள்ளிடம் போவதற்கு நிஜமாகவே பயமாத்தான் இருக்கு!!

Unknown said...

கொள்ளிடம் என்ற பெயரைக் கேட்டதுமே என்னென்னெவோ தோன்றுகிறது! எல்லாம் சிறுவயதில் பொன்னியின் செல்வன் வாசித்த பாதிப்பு! பதிவு அருமை!

middleclassmadhavi said...

அந்தக் கால பெண்களுக்கு வேறு வழியில்லை!!

திகில் (நிஜ?) கதை நல்லாயிருக்கு. ஒருத்தரை மட்டும் துணைக்குக் கூப்பிடக் கூடாது போலிருக்கு! :-))

நிலாமகள் said...

ஹ‌ம்மாடி! வீட்டுக்கு வ‌ந்தாவ‌து விழுந்தாங்க‌ளே... க‌ரையிலேயே புரிந்து விழுந்து வைக்காம‌ல்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இந்தக் கதையை எத்தனைமுறை கேட்டாலும் அதன் திகில் ஃபேக்டர் குறைவதில்லை. என் பாட்டியும் பொழச்சுக்கெடந்தா என்பார். இந்தப் பதம் நிலையாமையைக் குறிக்கப் பயன்படுத்தின ஒரு குறியீடாகத்தான் படுகிறது ரிஷபன். இப்போ எல்லாரும் டச்வுட் சொல்லிக்கற மாதிரி.

CS. Mohan Kumar said...

Interesting experince. Simple narration. I have not heard this before.

Admin said...

படித்தேன்..புதிய அனுபவமாயிருந்தது..

பால கணேஷ் said...

அருமையான திகில் அனுபவம். கொள்ளிடத்தில் நான் குளித்த அனுபவத்தை நினைவு கூர்ந்தேன். மிக ரசித்தேன்...

Thenammai Lakshmanan said...

கரண்ட் கட்டானா நமக்கெல்லாம் பொழுது போக்கு த்ரில் கதை கேட்டு பயப்படுவதுதானே..:)

raji said...

நல்ல த்ரில்லர்தான்.சின்ன வயசுல இப்படி எல்லாமதான் நமக்கு த்ரில்லர் கிடைத்தது.

ஹுஸைனம்மா said...

ஒருவழியா, படிக்க விடுபட்ட கதைகள் எல்லாம் படிச்சுட்டேன்!! :-)))

பிழைச்சுக் கிடந்தா - இப்போ அபூர்வமாகவே கேட்டிருக்கிறேன்.

இந்தக் கதை முன்பே வாசித்திருக்கிறேன், உங்க பதிவுலயா அல்லது வேறு எங்குமான்னு தெரியலை.